விருதுநகர், டிச.11- விருதுநகரில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில் தோழர் பிலிப்பின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி இரத்த தான முகாம் நடைபெற்றது, பாத்திமாநகர் அங்கன்வாடி மையத்தில் வாலிபர் சங்க ரத்ததான கழகம் சார்பில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் பி.பொன்பாண்டி தலைமை தாங்கினார். நகர்க்குழு உறுப்பினர்கள் பி.டேனியல், எஸ்.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்த னர். நகரச் செயலாளர் ஆர்.தீபக்குமார் வரவேற்றார். முகாமை தொழிலதிபர் அம்பாள்ஆர்.முத்துமணி துவக்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர் கே.ஜெயக் குமார், முன்னாள் மாவட்ட பொருளாளர் பி. ராஐா, கிளப் கன்வீனர் எம்.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வாலி பர் சங்க மாவட்ட செயலாளர் எம்.ஜெய பாரத் சிறப்புரையாற்றினார். முடிவில் ஆன்ட்ரூ நன்றி கூறினார். மேலும் இதில் நகர்க்குழு உறுப்பினர் எம்.மணிகண்டன், மாரிக்கனி, சத்தியஜித் செல்வக்குமார் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.