மதுரை மக்களின் அன்புக்குரிய தலைவரும் மதுரை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளருமான தோழர் பொ.மோகன் அவர்களின் 13-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அக்டோபர் 30 ஞாயிறன்று பல்வேறு பகுதிகளில் அவரது உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டக்குழு அலுவலகம்,மாக்சிம் கார்க்கி படிப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மா.கணேசன்,சு.வெங்கடேசன் எம்.பி., துணைமேயர் தி.நாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.