மதுரை, டிச.18- அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட 10 ஆவது மாநாடு டிசம்பர் 20 ஆம் தேதி ஒத்தக்கடையில் நடைபெறு கிறது. மாநாட்டை முன்னிட்டு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவராக பணியாற்றி மறைந்த முது பெரும் தோழர் கே.எம்.கண பதி நினைவாக திருப்பரங் கன்றத்தில் ஜோதி எடுப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று மாலை நடைபெற்றது. நினைவு ஜோதியை விவ சாயிகள் சங்க தலைவர் களில் ஒருவரான சுப்பிரமணி எடுத்துக் கொடுக்க விவ சாயத் தொழிலாளர் சங் கத்தின் திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் ம. தெய்வேந்திரன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சங்கத் தின் மாவட்டத் தலைவர் வி. உமாமகேஸ்வரன், மாவட் டச் செயலாளர் சொ.பாண்டி யன், ஒன்றிய தலைவர் சுரேஷ், பொருளாளர் தீத்த ராப்பன், ஒன்றியத் துணைச் செயலாளர் திருஞானசம் பந்தம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய செயலா ளர் எம்.ஜெயக்குமார் மற்றும் தோழர் கே.எம்.கணபதி அவர்களின் மகள் ஜி.கெளரி, பேத்திகள் சுபாஷினி, கீர்த் தனா மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.