திண்டுக்கல், ஜுலை.11 தோழர். பி.தேவராஜன் செவ் வாயன்று காலமானார். அவருக்கு வயது (67). மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேடசந்தூர் தாலுகா கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவராக செயல் பட்டவர். தாலுகாக்குழு உறுப்பி னர், மற்றும் விவசாயத் தொழிலா ளர் சங்கம், விவசாய சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளில் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டவர். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். எரியோட்டில் ராமசாமி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. புத னன்று இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.