districts

img

மாணவர்களுக்கு ரூ.168 கோடி கல்விக் கடன்

மதுரை, பிப். 14 - 2023-2024 கல்வி ஆண்டில், மதுரை மாவட்ட மாணவர்களுக்கு ரூ. 168 கோடி அளவிற்கு கல்விக்கடன் வழங்கப் பட்டு புதிய சாதனை படைக்கப் பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்விக் கடன் வழங்கு வதில், 2023-2024-ம் கல்வி ஆண்டில் மட்டும் 4 புதிய சாதனைகள் படைக்கப் பட்டு உள்ளதாகவும் அவர் பெருமிதத்து டன் கூறியுள்ளார். இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்ப தாவது:

விரிவான சிறப்பு முகாம்
2023-24 ஆம் ஆண்டுக்கான கல்விக் கடன் வழங்க மாவட்ட நிர்வாகமும்,  வங்கி நிர்வாகமும், மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் அலுவலகமும் இணைந்து கூட்டாக விரிவான முயற்சி  எடுத்தன. கடந்த 24.11.2023 அன்று மாவட்டம் முழுமைக்குமான கல்விக்கட னுக்கான சிறப்பு முகாம் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடத்தப்பட்டது. 

ரூ. 43 கோடி கூடுதல்
இதனைத் தொடர்ந்து வங்கிகளுக் கான ஆய்வுக் கூட்டத்தில் கல்விக் கடன் பற்றிய தொடர் ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஆண்டு தரப்பட்ட ரூ. 125 கோடி என்ற இலக்கைத் தாண்டி இந்த ஆண்டு ரூ. 168 கோடியே 28 லட்சம் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

79 சதவிகிதம் பேருக்கு கடன்
இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்து ள்ளவர்களின் எண்ணிக்கை 2627. இவர்களில் 2078 பேருக்கு 168 கோடியே 28 லட்சம் ரூபாய் கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது. கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 79 சதவிகிதம் பேருக்குக் கடன் வழங்கப் பட்டுள்ளது. 

தேசிய வங்கிகள் முதலிடம்
வழங்கப்பட்டுள்ள கல்விக்கடனில் தேசியமயமாக்கப்பட்ட 12 வங்கிகள் 1521 மாணவர்களுக்கு ரூ. 150 கோடியே 69 லட்சத்தை கடனாக வழங்கியுள்ளன. 21 தனியார் வங்கிகள் 557 பேருக்கு ரூ. 17 கோடியே 59 லட்சத்தை கடனாக வழங்கியுள்ளன. 

கனரா வங்கி,  எஸ்பிஐ முன்னிலை
கனரா வங்கி 387 மாணவர்களுக்கு ரூ. 44 கோடியே 50 லட்சம் அளவிற்கு கடன் வழங்கியுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 378 மாணவர்களுக்கு ரூ.  32 கோடியே 99 லட்சம் கடன் வழங்கி யுள்ளது. கூடுதல் முயற்சி எடுத்து அதிக கல்விக்கடன் வழங்கியுள்ள இந்த இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கி களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரி வித்துக்கொள்கிறேன். கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 74 சதவிகிதம் கடன் வழங்கியுள்ளன. 

ஆக்சிஸ் வங்கி ரூ. 12 கோடி
கடந்த முறையை விட இந்த ஆண்டில் தனியார் வங்கிகள் 90 சத விகிதத்திற்கும் அதிகமான விண்ணப் பங்களுக்கு கடன் வழங்கியுள்ளன. தனியார் வங்கிகளில் அதிகபட்சமாக ஆக்சிஸ் வங்கி, 497 கல்விக்கடன் விண் ணப்பங்களில் 494 விண்ணப்ப தாரர்களுக்கு ரூ. 12 கோடியே 37 லட்சம் கல்விக்கடன் வழங்கியுள்ளது.

4 புதிய சாதனைகள்
இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் பெற்றுத்தரும் இயக்கத் தில் நான்கு புதிய சாதனைகள் நிகழ்த்தப் பட்டுள்ளன.

1. கல்விக் கடனில் மதுரை மாவட்டம் 150 கோடியைத் தாண்டி வரலாற்றுச் சாதனை.

2. தமிழ்நாட்டில் கல்விக்கடனுக்கான மாவட்ட சராசரி 35 கோடி ரூபாய் என்ற நிலையில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 168 கோடி வழங்கப்பட்டுள்ளது.

3. மும்பையைப் போல 80 சதவிகித கல்விக்கடன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

4. தனியார் வங்கிகள் முதன் முறையாக 90 சதவிகிதத்திற்கு மேல் கல்விக்கடன் வழங்கியுள்ளன.

பாராட்டுக்குரிய வங்கி அதிகாரிகள்
இவைகள் எல்லாம் இந்திய அள வில் மிகச்சிறந்த முன்னுதாரணம் ஆகும். இதற்காக தொடர்ந்து உழைத்தி ட்ட வங்கிகளுக்கும், மாவட்ட நிர்வா கத்திற்கும் எனது பாராட்டினைத் தெரி வித்துக் கொள்கிறேன். மிக அதிக தொகையை கல்விக்கடனாக வழங்கி யுள்ள ‘கனரா வங்கி’யின் சார்பில் துணைப்பொது மேலாளர் சுஜித் குமார் சாகு அவர்களையும் ‘ஸ்டேட் பேங்க்  ஆப் இந்தியா’வின் சார்பில் முதன்மை  மேலாளர் ராம்பிரசாத் அவர்களையும் ‘மாவட்ட முன்னோடி வங்கி’யின் மேலா ளர் அனில் மற்றும் சந்தான பாண்டியன் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.

இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.