districts

அன்னை தெரசா பல்கலை. முதுநிலை மாணவியர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டித்திடுக!

திண்டுக்கல்,அக்.9-  அன்னை தெரசா பல்கலைக்கழக முது நிலை மாணவியர் சேர்க்கைக்கான காலக்  கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்  கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அரசு கல்லூரி ஆசிரியர்  கழகத்தின் மாநில இணைச் செயலாளர் சோ.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மற்றும் தேனி மாவட் டங்களில் செயல்படும் மகளிர் கல்லூரிகள், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர்  பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்றுள் ளன. அரசு கல்லூரிகளில் முதுநிலை மாண வர் சேர்க்கைக்கு இணைய தளத்தில் பதிவு செய்தவர்களின் விவரம் செப்டம்பர் 20 ஆம் தேதிதான் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட் டது. செப்டம்பர் கடைசி வாரத்தில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.  மாணவர் சேர்க்கை தொடங்கி 10 வேலை நாட்களுக்குள் , அக்டோபர் 7 ஆம்  தேதி முதுநிலை மாணவர் சேர்க்கை முடிக்க வேண்டும் என அன்னை தெரசா பல்க லைக்கழகம் கடிதம் அனுப்பியுள்ளது. திண்டுக்கல், நிலக்கோட்டை அரசு மக ளிர் கல்லூரிகளில் முதுநிலை பிரிவுகளில் நூற்றுக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன.  இக் காலியிடங்களை நிரப்ப நேரடி விண்ணப்பம் தற்போதுதான் வழங்  கப்பட்டு வருகிறது. இளநிலை பிரிவுகளில்  மூன்று ஆண்டு  முடித்தும்,  சில பாடங்களில் தேர்ச்சி பெறாத  மாணவர்களுக்கு, உடனடி தேர்வு பல்க லைக்கழகத்தின் மூலம் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு முடிவுகளையே இது வரை வெளியிடாத பல்கலைக்கழகம், குறைந்த நாட்களிலே முதுநிலை மாணவர் சேர்க்கை முடிக்கக் கூறுவது பெண் கல்விக்கு எதிரானது. கண்டிக்கத்தக்கது.  எனவே , அன்னை தெரசா பல்கலைக்கழ கம் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.