விருதுநகர், ஏப்.17- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் உதவித் தொகை வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. வத்திராருப்பு வட்டத்திற்குட்பட்டது அயன்நத்தம் பட்டி. இப்பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான ஜோசப், விநோத்அமல்ராஜ், செபஸ்தியான் ஆகியோர் உதவித் தொகை கோரி வத்திராயிருப்பு வட்டாட்சியரிடம் இணையதளம் மூலம் பலமுறை கோரிக்கை மனு அளித்த னர். ஆனால், உதவித் தொகை வழங்கவில்லை. இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் முற் றுகை நடத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மீண்டும் மனு அளித்தால் உதவித்தொகை வழங்கப்படும் என வட்டாட்சியர் அலுவலகத்தில் தெரி விக்கப்பட்டது. ஆனால், உறுதியளித்தபடி வழங்கவில்லை. இதுகுறித்து திங்களன்று நான்கு மாற்றுத்திற னாளிகளும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் திங்க ளன்று கோரிக்கை மனு அளித்தனர். அவர் உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.