இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மார்ச் 18 அன்று சமூக நலன் -மகளிர் உரிமை துறையின் மூலம் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை- கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையேற்று, ஏழைப் பெண்களுக்கு ரூ.2.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.