திண்டுக்கல், ஜுலை 24- திண்டுக்கல்லில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவர் ஆர்.ராமராஜ் நினைவு தினம் ஞாயிறன்று அனுஷ் டிக்கப்பட்டது. அவரது உரு வப்படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத் தப்பட்டது. மூத்த தோழர் ஆர்.மணி, கட்சியின் மாவட் டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, மாவட் டக்குழு உறுப்பினர் கே.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழனியை அடுத்த ஓபுளா புரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் மாவட்டச் செய லாளர் ஆர்.சச்சிதானந்தம் உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் பி். செல்வராஜ் மற்றும் பலர் கலந்துகொண் டனர்.