மதுரை, டிச.22- மதுரை சமூக அறிவியல் கல்லூரி என்று 1969 முதல் பதிவுறு சங்கமாக இயங்கி வந்த கல்லூரியை 28. 4. 2005 முதல் “கேப்டன் டி.வி. ராஜா பாமா காலேஜ்” என்றும் 08. 08 . 2005 முதல் “கேப்டன் டிவிஆர் பவுண்டே ஷன் ஃபார் ஹெச்ஆர்டி” என்றும் முறை கேடாக கல்லூரியின் பெயரை பதிவு மாறு தல் செய்ததை ரத்து செய்து மதுரை சமூக அறிவியல் கல்லூரி என்று பெயரிலேயே கல்லூரியை தொடர்ந்திட வேண்டும். கல் லூரி மேலாண்மை குறித்த நிர்வாக சீர் கேட்டை தனி அலுவலர் ஒழுங்குபடுத்திட வேண்டும். கல்லூரியை சீர்கேட்டுக்கு உள்ளாக்கிய முன்னாள் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை சமூக அறிவியல் கல்லூரி என்ற பொதுச் சொத்து கேப்டன் டி. வி. ராஜா குடும்ப சொத் தாக மாறிவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். சங்க உறுப்பினர் பட்டியலில் மறைந்த உறுப்பினர்களின் வாரிசுகளை யும் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களையும் இணைத்து ஜனநாயக அமைப்பாக சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை செல்லூரில் உள்ள மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக மூட்டா, தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் அல்லாத அலுவலர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் அல்லாத அலுவலர் சங்கம் கூட்டமைப்பான மதுரை சமூக அறிவியல் கல்லூரி மீட்புக்குழு சார்பில் மூட்டா மண்டல தலைவர் பேராசிரியர் ரமேஸ்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் என். ஜெயச்சந்திரன் துவக்கி வைத்து பேசி னார். தோழமைச் சங்க நிர்வாகிகள் ஆத ரித்துப் பேசினர். மூட்டா மண்டல பொருளா ளர் ஏ.டி. செந்தாமரை கண்ணன் நிறைவுரை யாற்றினார். ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரி யர் அல்லாத அலுவலர் சங்க மாவட்ட செய லாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.