மதுரை, நவ. 11- உதவி ஆசிரியர்களுக்கு ரூ . 25 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை அழகர் கோவில் சாலையிலுள்ள மதுரை காமராசர் பல்கலைக் கழகக் கல்லூரியில் வியாழனன்று மூட்டா கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் கு.சுரேஷ் குமார் தலைமை வகித்தார். செய லாளர் முனைவர் ச.இராமசுந்தரம். பொருளாளர் பேராசிரியர் ஏ. டி. செந்தாமரைக்கண்ணன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர், மண்டலம் - 1 தலைவர் பேரா. எஸ். இரமேஷ்ராஜ் ஆதரி த்துப் பேசினார், துணைத் தலைவர் பி. ஆனந்தராஜ். கிளை பொருளாளர் சி. இராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.