districts

img

மூவரைவென்றானில் ரூ.69 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவில்லிபுத்தூர், மே 10- விருதுநகர் மாவட்டம், திரு வில்லிபுத்தூர் அருகே மூவறை வென்றான் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ரமேஷ்கண்ணன் வரவேற்றார். முகாமில் வருவாய்த்துறை சார்பில் 208 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான இலவச  வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு  திட்டம் மூலம் 100 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் உதவி தொகை வழங்கும் ஆணை,  83  பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதலுக்கான ஆணை, 99 பய னாளிகளுக்கு குடும்ப அட்டை கள், 5  பேருக்கு இலசவ தையல்  இயந்திரம், 4 கர்ப்பிணி பெண் களுக்கு ரூ.8 மதிப்பிலான ஊட்டச்  சத்து பெட்டகம், 5 விவசாயிகளுக்கு ரூ.27,600 மதிப்பிலான வேளாண் உபகரணங்கள் என  504 பயனாளி களுக்கு ரூ.68.91 லட்சம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை ஆட்சி யர் ஜெயசீலன் வழங்கினார். விழாவில் ஆட்சியர் ஜெய சீலன் பேசுகையில், ‘ விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில்  இரு  போகம் நெல் சாகுபடி செய் யப்படும் அளவுக்கு செழிப்பான பகுதியாக உள்ளது. தற்போது சிறு தானியங்களுக்கு சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. சிறு தானிய சாகு படிக்கு அரசு வழங்கும் திட்டங் களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.   இதில் திட்ட இயக்குனர் தண்ட பாணி, ஆர்.டி.ஓ விஸ்வநாதன், தனி துணை ஆட்சியர் வித்யா, வத்தி ராயிருப்பு ஒன்றிய தலைவர் சிந்து  முருகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.