districts

img

மீசலூரில் கிராமசபைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

விருதுநகர், மே.2- விருதுநகர் அருகே உள்ள மீசலூ ரில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையேற்றார். அதில்,  ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகம், கிராம  வளர்ச்சித் திட்டம், அண்ணா மறு மலர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப் பட்ட பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை குறைப்பு திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு. தண்டபாணி, மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர் ஞானகௌரி, தனித் துணை ஆட்சியர் வித்யா, செயற்பொறி யாளர் இந்துமதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விசாலாட்சி, ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ராஜம், சாத்தூர் கோட் டாட்சியர் அனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.