விருதுநகர், ஏப்.12- திருச்சுழி அருகே உள்ள இலுப்பையூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 528 பேருக்கு ரூ.30.56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை விருது நகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கி னார். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதி யோர், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திற னாளிகள் மற்றும் கணவரால் கைவிடப் பட்டோருக்கு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரண உத வித்தொகை என 63 பயனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 67 ஆயிரத்து 500- மதிப்பி லான உதவித்தொகையும், 445 பயனாளி களுக்கு ரூ.25 லட்சத்து 92 ஆயிரத்து 225 மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டா, நத்தம் பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா, நத்தம் சிட்டா ஆகியவற்றையும் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் 6 பேருக்கு ரூ.1 லட்சத்து 67ஆயிரத்து 875- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், வேளாண்மைத் துறையின் கீழ் 3 பேருக்கு ரூ.4ஆயிரத்து 273இல் நலத்திட்ட உதவி, தோட்டக் கலைத்துறை மூலம் மூவருக்கு ரூ.14ஆயி ரத்து 250, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1இலட்சத்து10ஆயிரம் மதிப்பிலான கடனுதவி என மொத்தம் 528 பயனாளி களுக்கு ரூ.30 இலட்சத்து 56 ஆயிரத்து 123 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சி யர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) இரா.தண்டபாணி, தனித் துறை ஆட்சியர்(ச.பா.தி) வித்யா, கோட்டாட்சியர் கல்யாணகுமார்,நேர்முக உதவியாளர்(விவசாயம்) நாச்சியார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திர சேகர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.