districts

img

மூன்று பேரின் மரபணுசோதனைக்கு ரத்த மாதிரி சேகரிப்பு

புதுக்கோட்டை, ஏப்.25-  வேங்கைவயல் தலித் குடியிருப்பின் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு  கலந்த சம்பவம் கடந்த டிச.26 அன்று வெளியே வந்தது. இதில், தற்போது சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், குடிநீர்த் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மனிதக்கழிவுகள் ஏற்கெ னவே சென்னையிலுள்ள தடய அறிவியல் ஆய்வு மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையுடன், சந்தேகப்படும் 11  பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தி ஒப்பிட்டுப்  பார்க்க முடிவு செய்தனர். இதுகுறித்து எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியும் பெறப்  பட்டது. வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் உட்பட ஒன்பது பேரிட மும், இறையூர் மற்றும் கீழமுத்துக்காடு பகுதி யைச் சேர்ந்த தலா ஒருவர்  என மொத்தம் 11 பேரி டம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, அவர்களை செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரும் முயற்சி யை சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கொண்ட னர். ஆனால், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு வரவில்லை. ஆயுதப்படைக் காவலர்,  கீழமுத்துக்காட்டைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மற்றும் இறையூரைச் சேர்ந்த  ஒருவர் ஆகிய மூன்று பேர் மட்டுமே வந்திருந்த னர். அவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப் பட்டன. அந்த மாதிரிகள் விரைவில் சென்னை யிலுள்ள தடய அறிவியல் மையத்துக்கு அனுப்பி  வைக்கப்பட்டு மரபணு பரிசோதனை மேற்கொள்  ளப்படவுள்ளது. ரத்தமாதிரி சேகரிப்பைப் புறக்கணித்த வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டுப் பேரிடம் மீண்டும் சிபிசிஐடி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.