தேனி, ஜன.10- கர்னல் பென்னிகுக் பிறந்தநாளை முன்னிட்டு லோயர் கேம்ப்பில் உள்ள அவரது மணிமண்டபத்தை தமிழக பொதுப்பணித்துறையினர் மராமத்து பணிகள் மேற் கொண்டு வருகிறார்கள். முல்லைப்பெரியாறு அணையை நிர்மாணித்த இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக் நினை வாக தமிழ்நாடு அரசு, கூடலூர் அருகே லோயர் கேம்ப்பில் ரூ.1.25 கோடி செலவில், அவரது முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை எழுப்பியது .சபரிமலை பக்தர் களும், சுற்றுலாப் பயணிகளும், பள்ளி மாணவ, மாணவி யரும் பென்னிகுக் மண்டபத்திலுள்ள பென்னிகுக்கின் சிலை, பெரியாறு அணை மாதிரி மற்றும் அணை குறித்த புகைப் படங்களையும் பார்வையிட்டு செல்கின்றனர். கடந்த 2019 முதல், ஜான் பென்னிகுக்கின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 15 ஆம்தேதி பென்னிகுக்கின் 182 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.இதற்காக பொதுப்பணித் துறை சார்பில், மண்டபத்தில் வளர்ந்திருந்த புதர்செடி களை வெட்டி அகற்றியும், புற்களை வெட்டியும், மண்ட பத்தை சுத்தம் செய்து, வர்ணம் பூசி அலங்கரித்து வரு கிறார்கள்.