தென்னை விவசாயிகள் சங்க கிளை அமைப்பு
மதுரை, ஜூலை 18- மதுரை மாவட்டம் கருப்பட்டியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க கிளை அமைக்கப்பட்டது. கூட்டத்திற்கு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. பிச்சை தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஏஏ.விஜயமுருகன். மாவட்டச்செயலாளர் பி.நாகேந்தி ரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் எஸ்.பி.இளங்கோவன், துணைச் செயலாளர் பி.கார்த்தி கேயன். ஆகியோர் கலந்துகொண்டனர். கிளைத் தலைவ ராக உமர்தீன், செயலாளராக ஆனந்த், பொருளாளராக காதர்மைதீன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர் கூட்டத்தில் 50 மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நெகிழியை விழுங்கிய குழந்தை பலி
சிவகாசி, ஜூலை 18- சிவகாசி அருகே துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன்( 26). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களின் ஏழு மாத ஆண் குழந்தை கலைக்கதிர். சம்பவத்தன்று வீட்டில் மசால் பொடி பாக்கெட் வாங்கி யுள்ளனர். அதன் நுனியை வெட்டி கீழே போட்டுள்ள னர். அதை, குழந்தை காலைக்கதிர் விழுங்கியுள்ளது. இதையடுத்து சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் குழந்தையை சேர்த்துள்ளனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர். அப் போது, மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது.
பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்
விருதுநகர், ஜூலை.18- மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பிச்சை (39). இவர் சிவகாசி பணிமனையில் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி பேருந்தை ஓட்டி வந்தார். விருதுநகரில் உள்ள தனியார் வங்கி அருகே வந்த போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத நபர் பேருந்தை மறித்து தட்டியுள்ளார். ஓட்டுநர் பிச்சை, நடத்து நர் ஆகியோர் மேற்படி நபரிடம் ஏன்? இவ்வாறு செய்தாய் எனக் கேட்ட போது, கல்லை எடுத்து பிச்சையின் மண்டை யை உடைத்து விட்டு தப்பியோடி விட்டார். விருதுநகர் மேற்கு காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
கார் மோதி ஒருவர் பலி
அருப்புக்கோட்டை, ஜூலை 18- அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள் புரத்தைச் சேர்ந்தவர் அம்மாசி(48). இவர் நெசவாளர் காலனி அருகே உள்ள தனியார் உணவகத்தில் புரோட்டோ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். திங்களன்று இவர் வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தார். சுக்கிலநத்தம் பாலம் அருகே வந்த போது, இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் அம்மாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி
இராஜபாளையம், ஜூலை 18- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்- இல் நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஆனால், ஏடிஎம்-மில் பணம் இல்லாத நிலையில் அலாரம் ஒலித்ததை அடுத்து கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்த கடப்பாறை கம்பியை போட்டுவிட்டு சென்றுவிட்டனர். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
நீதிமன்ற புறக்கணிப்பு
திருவில்லிபுத்தூர், ஜூலை 18- விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் கோட்டையூரை சேர்ந்த முருகன் வழக்கறிஞராக இருந்து வருகிறார் இவரை வத்திராயிருப்பு ஒன்றியம் கும்மா பட்டியைச் சேர்ந்த வைர குட்டி மற்றும் அவருடைய நண்பர்கள் ஒன்பது பேர் சேர்ந்து தாக்கி காயம் ஏற்படுத்தி உள்ளனர் இது குறித்து வத்ராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது வழக்கறிஞரை தாக்கிய குற்றவாளி யை கைது செய்யக் கோரி திங்கட்கிழமை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர் இதற்கிடையில் வழக்கறிஞரைத் தாக்கியதில் தொடர்புடைய வைரக்குட்டி, வேனல் இருவரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
காமராஜர் பிறந்ததினம்
திருவில்லிபுத்தூர், ஜூலை 18- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள நூர்சாகிபுரத்தில் காமராஜரின் 120-ஆவது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. காமராஜர் உருவச் சிலைக்கு நூர்சாகிபுரம் பெரியசாமி, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வ.ஆறுமுகச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் பெ.பெரியசாமி, தெற்கு வட்டாரத் தலைவர் பால.குரு நாதன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் வெ.கணேசன் மேற்கு மாவட்டத் தலைவர் ஆ.ரெங்கசாமி திருவில்லி புத்தூர் நகர் தலைவர் பக்ஷி ராஜா வன்னியராஜ், இராஜ பாளையம் நகர்மன்ற உறுப்பினர் ஏ.டி.சங்கர் கணேஷ், மாவட்டச் செயலாளர் முருகேசன், வடக்கு வட்டாரத் தலைவர் முருகராஜ், ஆர்.டி.ஐ.மாநிலச் செயலாளர் வசந் தம் சேதுராமன், க.துள்ளுக்குட்டி, வட்டார பொதுச்செய லாளர் த.காளிராஜ். மாயாண்டி ஆகியோர் மாலையணி வித்து மரியாதை செலுத்தினர்.
வந்தார்கள்... பார்த்தார்கள்... சென்றார்கள்
மதுரை, ஜூலை 18- மதுரை சென்னம்பட்டி கிராமத்தில் நன்செய் நிலத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கள்ளிக்குடி வட்டாட்சியர் தே. சுரேந்திரனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் உடனடி யாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வாய்க்கால் பட்டா நிலம் வழியாகச் செல்லும் நிலவியல் வாய்க்காலாக இருப்பினும் புகார்தாரரின் நிலத்திற்கு தண்ணீர் செல்வ தற்குத் தடை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். காவல்துறை பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கடந்த ஜூன் 23-ஆம் தேதியிட்ட உத்தரவில் வட்டாட்சியர் கூறியுள்ளார். அப்புற மென்ன... அதிகாரிகள் வந்தார்கள்... பார்த்தார்கள்... சென்றார்கள்.... ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வில்லை... காரணம் தான் தெரியவில்லை. அவரது வய லுக்கு தண்ணீர் போக வழியில்லை.
மடையும் இல்லை வாய்க்காலும் இல்லை
மதுரை, ஜூலை 18- நிலம் உள்ளது... விவசாயம் நடக்காது... படிக்கும் பிள்ளைகள் உள்ளனர்... ஆனால் பேருந்து வராது. மயா னம் உள்ளது... ஆனால் போக முடியாது. இது ஒரு கிரா மத்தின் நிலை. இந்த கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது. கரும், நெல், பருத்தி பயிரிடப்படுகிறது. கண் மாய்க்கு தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள பாலம் ஒன்று இடிந்து விட்டது. தண்ணீர் வந்தாலும் கண்மாயை சென்றடையாது, அப்படியே சென்றாலும் மடைகள் முற்றி லும் சேதமடைந்துவிட்டது. என்ன செய்வார்கள் விவ சாயிகள். இந்த கிராமத்தில் உள்ள சுமார் 30 மாணவ-மாணவிகள் நடுநிலைப் பள்ளிக்கு சுமார் 2.5 கி.மீ தினம்தோறும் நடந்து சென்று பேருந்தில் பயணம் செய்கின்றனர். பேருந்து ஒன்று பொருந்தாத நேரத்திற்கு வந்து செல்கிறது. காலை 8.30 மணிக்கு வரும் அந்தப் பேருந்தை காலை 7,30 மணிக்கு இயக்கவேண்டுமென்ற கோரிக்கை கண்டுகொள்ளப் படவில்லை. ரேஷன் கடைக்கு இக்கிராம மக்கள் சுமார் இரண்டு கி.மீ., தூரம் நடந்து சென்றுதான் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதெல்லாம் அதிகாரிகளிடம் சொல்லி ஓய்ந்துவிட்டனர் மக்கள். குறைந்தபட்சம் பகுதி நேரக் கடையாவது திறக்க வேண்டுமென்கின்றனர் மக்கள். இங்குள்ள மயானத்திற்கு செல்லும் பாதையில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப் பட்டுள்ளது. சில மாதங்களாக பணியில் எந்த முன்னேற்ற மும் இல்லை. மக்கள் மயானத்திற்கு செல்வதற்கு சிர மப்படுகின்றனர். இந்த கிராமம் மதுரையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிராமத்தின் பெயர் மாசவநத்தம்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பறிப்பு
விருதுநகர், ஜூலை 18- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பணிபுரி யும் செயல் திறன் உதவியாளர் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் செயல்படுவதாக மக்கள் நீதி மய்யம் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது. மனுவில், “மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செயல் திறன் உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன், இவர், செயற்கை கால்கள் கோரி அலு வலகத்திற்கு வரும் மாற்றுத் திறனாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு விதிமுறைகளை மீறி மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வரச் செய்து தரமற்ற முடநீக்கி யல் உபகரணங்களை வழங்கி வருகிறார். இதனால், சுய லாபம் அடைவதோடு, அரசு வழங்கும் இலவசத் திட்டங் களை மாற்றுத் திறனாளிகள் பயன்பெற முடியாமல் போகிறது. மாற்றுத் திறனாளிகளை மிரட்டியும் வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திற னாளிகளிடம் அவர் வாங்கிய பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கன்னிவாடி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை
சின்னாளபட்டி, ஜூலை 18- திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் அரசு சமுதாய நல மையம் உள்ளது இந்த மருத்துவமனையை நம்பி அரு கில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் சிகிச்சைபெற வந்து செல்கின்றனர். இங்கு போதுமான மருத்துவர்கள் மக் கள் அல்லல்பட்டு வருகின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டி யார்சத்திரம் ஒன்றியச் செயலாளர் சக்திவேல் கூறிய தாவது: மருத்துவமனையில் சுமார் நான்கிற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். தற்போது ஒரு பெண் மருத்து வர் மட்டுமே பணியில் உள்ளார். மருத்துவர் காலை ஒன்பது மணிக்குத்தான் பணிக்கு வருகிறார். இரத்தப் பரிசோத னைக் கூடத்தில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். கூடுதலாக மருந்தாளுனர், இரத்தப் பரிசோதனையா ளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
சாதிச்சான்றிதழ் பிரச்சனை ஆர்டிஓ மீது புகார்
மதுரை, ஜூலை 18- மதுரை மாவட்டம் சத்தியமூர்த்தி நகரில் சுமார் 500 காட்டுநாயக்கன் இனக்குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது மதுரை வருவாய் கோட்ட அலுவலர் காட்டு நாயக்கன் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்காமல் கால தாமதம் செய்கிறார். தாய், தந்தை சான்றிதழ் பெற்றுள்ள னர். ஆனால், பிள்ளைகளுக்கு சான்றிதழ் மறுக்கப்படு கிறது. மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி வருவாய் கோட்ட அலுவலர்கள் காட்டுநாயக்கன் மக்களுக்கு தடை யில்லாமல் சாதி சான்றிதழ் வழங்குகின்றனர். மதுரை மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் மட்டும் சாதிச் சான்றிதழ் வழங்காமல் உள்ளார். இதன் மீது நட வடிக்கை எடுக்க வேண்டுமென டென் சொசைட்டி என்ற அமைப்பு மதுரை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.
முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைவு
தேனி, ஜூலை 18- முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைவானதால் நீர்வரத்து குறைந்து விட்டது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணை யின் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. நீர்மட்டம் 136 அடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஞாயிறு முதல் மழை குறையத் தொடங்கியது. இதனால் அணையின் நீர் வரத்தும் குறைந்தது. 8,000 கன அடி வரை நீர் வரத்து வந்த நிலையில் திங்களன்று காலை அணைக்கு 2,543 கன அடி மட்டுமே நீர் வருகிறது. நீர் மட்டம் 135.90 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத் தேவை களுக்காக 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6,093 மி.கன அடியாக உள்ளது. வைகை அணை நீர் மட்டம் 57.74 அடியாக உள்ளது. நீர் வரத்து 1,789 கன அடியாக உள்ளது. திறப்பு 969 கன அடி. இருப்பு 3183 மி.கன அடி.
பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் நிரம்ப வாய்ப்பில்லை
மதுரை, ஜூலை 18- இந்தாண்டு பொறியியல் கல்லூரி களில் ஐம்பது சதவீத இடங்கள் நிரம்ப வாய்ப்பில்லை. தமிழ்நாடு பொறியியல் சேர்க் கைக்கான (டிஎன்இஏ) விண்ணப்ப நிலவரப்படி, இந்த ஆண்டு ஐம்பது சதவீத இடங்கள் காலியாக இருக்கும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ள னர். இதுவரை, 1.79 லட்சம் மாணவர் கள் பொறியியல் சேர்க்கைக்காக பதிவு செய்துள்ளனர், அவர்களில் 1.28 லட்சம் மாணவர்கள் மட்டுமே தங்கள் சான்றி தழ்களை இணையதளத்தில் பதி வேற்றம் செய்துள்ளனர். பொறியியல் மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்ப விநியோகம் தொடங்கி மாதமாகிவிட்டது. ஆனால். இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வமாக இல்லை என்பதையே காட்டுகிறது. சிபிஎஸ்இ தேர்வுகள் வெளியானால் ஒரு வேளை மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு ஒன்பது நாட்களில் ஆன்லைன் பதிவு எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியிருந்தது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு தான் 59 சதவீத இடங் கள் நிரம்பின. இல்லையெனில் 50 சத வீத இடங்கள் நிரம்பாமல் கல்லூரிகள் தவிப்பது வழக்கம். 59 சதவீத இடங்கள் நிரம்பியது எப்படி? கடந்த ஆண்டு, சூழ்நிலை முற்றி லும் மாறுபட்டது. அனைத்து மாண வர்களும் 12-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதனால், பலர் பொறியியல் படிக்க விரும்பினர். இந்த ஆண்டு திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வு நடைபெற்றதால் பொறியியல் படிப்புகளை நோக்கி மாணவர்கள் வர வில்லை என்கிறார் தனியார் பொறியி யல் கல்லூரி முதல்வர் கே.கிரிஷ். அரசு பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “கணினி அறிவியலைத் தவிர, மீதமுள்ள பொறியியல் படிப்பு கள் முடித்தால் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு இல்லை” என்றார்.
ஆசிரியர் தம்பதி படுகொலை
அருப்புக்கோட்டை, ஜூலை 18- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கரபாண்டியன். இவர் தனது மனைவி யான ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜோதிமணியுடன் வசித்துவந்தார். இவருடைய மகன் சதீஷ் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். சங்கரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணியை அவரது உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வது வழக்கம். திங்களன்று பிற்பகல் அவ ரது உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது சங்கரபாண்டியன் மற்றும் அவருடைய மனைவி ஜோதி மணி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறை யினர் இருவரின் உடல்களையும் கூராய்வுக்காக அருப்புக் கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை டிஐஜி பொன்னி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கட்டணக்கொள்ளை: எஸ்எப்ஐ புகார்
தேனி, ஜூலை 18- தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிடிஏ கட்டணம் ,பள்ளிக்கட்டணம் என்ற பெயரில் கட்ட ணக்கொள்ளை நடப்பதாக தேனி ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் புகார் அளித்தனர். ஆட்சியரிடம் சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் டி.நாகராஜ் அளித்த மனுவில், ‘‘தேவதானப்பட்டி, சில்ல மரத்துப்பட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிடிஏ கட்டணம், பள்ளிக் கட்டணம் என்ற பெய ரிலும், ஆண்டிபட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, போடி ஜ.க.நி.மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தனியார் பள்ளி களில் கட்டாய நன்கொடை ,பள்ளி கட்டணம் என வசூ லிக்கிறார்கள். தகவல் பலகையில் பள்ளிகளில் கட்டண விபரம் ஒட்டாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மேலாண்மை குழு சில பள்ளிகளில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமைக்கப்படாத பள்ளிகளில் மேலாண்மை குழு அமைக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
மக்கள் சேவை மைய பயிற்சி வகுப்பு நிறைவு
திருவில்லிபுத்தூர், ஜூலை 18- திருவில்லிபுத்தூர் மக்கள் சேவை அமைப்பின் சார்பில் தமிழ்நாடு அரசு பொது தேர்வாணையம் குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு கடந்த இரண்டு மாதங்க ளாக சனி, ஞாயிறு தினங்களில் நடத்தப்பட்டது. பயிற்சி நிறைவு விழா மக்கள் சேவை அமைப்பின் தலைவர் பி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் தலைமை பயிற்றுநராக செயல்பட்ட வி.குருசாமி, இணைப் பயிற்றுநர்களாக செயல்பட்ட வி.கலாவதி சேகர், செம்பருதி, செல்வி, வீரையா, வழக்க றிஞர் காமராஜ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மக்கள் சேவை மைய உறுப்பினர்கள் முத்துக்குமார், சண்முகநாதன் ஆகியோரை பென்னிங்டன் கமிட்டி செய லாளர் கௌரவித்தார்.
மதுபாட்டில் பறிமுதல்
இராஜபாளையம், ஜூலை 18- இராஜபாளையம் மாலையம்மன் கோவில் அருகே சேத்தூர் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடு பட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 80 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த வடக்கு தேவதானத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி (58) தப்பியோடிவிட்டார். காவல்துறை யினர் அவரைத் தேடுகின்றனர்.
கள்ளக்குறிச்சி சம்பவம்: மதுரையில் கண்காணிப்பு தீவிரம்
மதுரை, ஜூலை 18- சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்ததைக் கண்டித்து மாணவர்களோ, எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களோ எந்த இடத்தி லும் போராட்டம் நடத்துவதைத் தடுக்க, முக்கிய சந்திப்பு களில் 24 மணி நேரமும் காவல்துறை பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். . காவல்துறை ஆணையர் டி. செந்தில் குமார் உட்பட அனைத்து மூத்த காவல் அதிகாரிகளும், துணை காவல் ஆணையர்கள் ஞாயிறு இரவு 10 மணி முதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பள்ளிகள், கல்லூரிகள் முன்பு காவல்துறை பாது காப்பு போடப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறலாம் எனக் கருதப்படும் தமுக்கம், காளவாசல், தெப்பக்குளம் போன்ற முக்கிய இடங்களில் காவல்துறையினர் பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், பெரியார் பேருந்து நிலை யம், மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கட்டபொம்மன் சிலை சந்திப்பு, ரயில் நிலை யம் ஆகியவையும் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்தில் உள்ளது. கள்ளக்குறிச்சி பிரச்சனையைத் தொடர்ந்து காவல்துறை போராட்டங்களுக்கு காவல்துறை அனு மதி மறுத்துள்ளது.
ஊராட்சி செயலர்கள் கூட்டம்
நத்தம், ஜூலை 18- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலு வலக வளாகத்தில், ஊராட்சி செயலர்கள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது. மேலாளர் திலகம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர்கள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி கள் கலந்து கொண்டனர்.
அரசு உத்தரவை மீறி 35 பள்ளிகள் மூடல்
தேனி, ஜூலை 18- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஞாயிறன்று அந்த பள்ளி முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி யில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டு அங்கிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் திங்க ளன்று தனியார் பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நட வடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. தேனி மாவட்டத்தில் அரசு உத்தரவையும் மீறி 35 க்கும் மேற்பட்ட முக்கிய தனியார் பள்ளிகள் மூடப்பட்டு இருந் தன. தேனி, ஆண்டிப்பட்டி, வருசநாடு, கண்டமனூர், உத்தமபாளையம், சின்னமனூர், பெரியகுளம், போடி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டத்தில் மின்தடை குறையும் அதிகாரி நம்பிக்கை
விருதுநகர், ஜூலை 18- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 5 கோட்டங்களில் கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை ரூ.50 லட்சத்தில் பரா மரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டடதாக விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் க. தேன்மொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளை யம் ஆகிய 5 கோட்டங்களில் உள்ள 52 துணை மின் நிலையங்கள், மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை யிலான 45 நாட்களில் 24493 இடங்களில் மின்பாதைக்கு இடையூறாக இருந்த மரக் கிளைகள் வெட்டப்பட்டன. பழுதான 647 மின் கம்பங்கள் மாற்றப்பட்டன. 1173 சாய்ந்த நிலையில் இருந்த மின் கம்பங்கள் சரி செய்யப் பட்டன. 1349 புதிய மின் கம்பங்கள் தாழ்வான மின் கம்பங்களுக்கு இடையே ஊன்றப்பட்டுள்ளன. 18310 பழைய பீங்கான் இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டு பாலிமர் இன்சுலேட்டர்கள் பொருத்தப்பட்டன. 18.34 கி.மீ தூரத்திற்கு பழைய மின் கம்பிகள் மாற்றப் பட்டு புதிய மின் கம்பிகள் மாற்றப்பட்டன. ஜூலை 14,15இல் 664 மின் கம்பங்கள் நிறுவப்பட்டன. இப்பணிகள் நடை பெற்றுள்ளதால், வரும் காலங்களில் மின் தடை ஏற்படு வது வெகுவாக தவிர்க்கப்படும்.
வைகை அணையில் மீன் வளர்ப்பிற்கு 2வது கட்டமாக 3 லட்சம் மீன்குஞ்சுகள்
தேனி, ஜூலை 18- வைகை அணையில் மீன் வளர்ப் பிற்கு 2வது கட்டமாக 3 லட்சம் மீன் வளத்துறை சார்பில் மீன்குஞ்சுகள் விடப்பட்டது. வைகை அணையில் நடைபெறும் மீன்பிடி தொழிலில் வைகை அணை யை சுற்றியுள்ள 140க்கும் மேற்பட்ட மீன வர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 500 முதல் 700 கிலோ அள வில் மீன்கள் பிடிக்கப்பட்டு மக்க ளுக்கு விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. இயற்கையான முறையில் வள ரும் வைகை அணை மீன்களுக்கு பொது மக்களிடையே அதிகளவில் வரவேற்பு இருக்கும். மணிமுத்தாறு, பவானிசாகர் அணை உள்ளிட்ட பகுதிகளில் நுண் மீன் குஞ்சுகள் வாங்கப்பட்டு, அதனை மீன்வளத்துறை அலுவலகத்தில் உள்ள தொட்டிகளில் பராமரிக்கப்பட்டு அணையில் விடப்படும். இந்த ஆண்டு வைகை அணையில் புதிதாக 16 லட்சம் மீன் குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற் காக வைகை அணை மீன்வளத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில், பல லட்சம் நுண் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஜூலை முதல் வாரத் தில் 45 நாட்கள் வளர்ச்சியடைந்த சுமார் 3 லட்சம் மீன் குஞ்சுகள் வைகை அணை நீர்தேக்கத்தில் விடப்பட்டது. அதன்பின்னர் இரண்டாவது கட்டமாக அணையில் 3 லட்சம் நுண் மீன் குஞ்சு கள் விடப்பட்டது. 1 லட்சம் கட்லா மீன் குஞ்சுகளும், 2 லட்சம் ரோகு மீன் குஞ்சு கள் விடப்பட்டது. இந்த வருடத்தில் 16 லட்சம் மீன் குஞ்சுகள் நிர்ணயிக்கப் பட்டுள்ள நிலையில் மொத்தம் 6 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது.