திண்டுக்கல், ஏப்.16- ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தி வழங்கியதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது சனிக்கிழமையன்று திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ பெரிய சாமியை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரி வித்தனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் .தொட்டி சுத்தம் செய்ய அலவன்ஸ் வழங்க வேண்டும்.பணி ஓய்வு பணிக்கொடை, ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என விரிவான கோரிக்கை கடிதம் அமைச்சரிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சம்மேளன செயலாளர் கே.ஆர்.கணேசன், மாவட்ட தலைவர் ராம சாமி மாவட்ட நிர்வாகிகள் ராணி ,மாரியப்பன் பரமசிவம், தவக்குமார்,அழகேசன்,சரவணன், கண்ணகி உள்ளிட்ட சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் குறித்து ஆவன செய்வதாக அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.