districts

img

தொழிலாளருக்கு எதிரான சட்ட மசோதாவை திரும்பப்பெறக்கோரி சிஐடியு- அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தேனி,ஏப்.23- தொழிலாளர்களை வஞ்  சிக்கும்  வகையில்  வேலை  நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணி நேரமாக  உயர்த்தும் வகையில் தமி ழக அரசு கொண்டுவந்துள்ள சட்ட மசோதாவை திரும்  பப்பெற வலியுறுத்தி போடி யில் அனைத்துக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் நகர் தலைவர் முசாக் மந்திரி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.முனீஸ்வரன், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு  உறுப்பினர் பெருமாள், சிபிஐ நகரச்செயலாளர் கே.சத்தியராஜ், மதிமுக நக ரச் செயலாளர் ஆரோச் செல்வன், விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச்செய லாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு ஆகியோர் பேசினர். நிறை வாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை கண்டன உரையாற்றி னார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் தாலுகாச்செயலாளர் எஸ். செல்வம்,  விடுதலை சிறுத் தைகள் நகரச்செயலாளர் மோகன், விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.கே. பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அய்யம்பாளையம்

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி, கட்டுமானத்தொழிலா ளர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். '

கடலில் இறங்கி போராட்டம்

இராமேஸ்வத்தில் சிஐ டியு சார்பில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிஐடியு மாவட்ட செய லாளர் எம்.சிவாஜி தலைமை யேற்றார். நிர்வாகிகள் எம். கருணாமூர்த்தி, என்.பி. செந்தில், அ.சுடலைக்காசி, ஜே.பவுல்ராஜ், ஏ.ஞான சேகர்  உட்பட 60க்கும் மேற்  பட்டோர் கலந்து கொண்ட னர். மின் ஊழியர்கள்     தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பாக இராமநாதபுரம் துணை மின்நிலையத்தில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திட்ட செயலாளர் ஜி. காசி நாதன் தலைமை தாங்கி னார். பரமக்குடி கோட்ட செய லாளர் ஆரோக்கியம், மாநில துணைத்தலைவர் ஆர்.குரு வேல் ஆகியோர் பேசினர்.