districts

ஓய்வூதியர்கள் நேரடியாக வழங்கும் சான்றை பெற்றிடுக! மாவட்ட ஆட்சியருக்கு சிஐடியு கோரிக்கை

மதுரை, ஏப்.7-  மதுரை முறைசாரா தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் பென்ஷன் பெற உயிர்ப்பு சான்று ஆன்லைன் பதிவு வரும்வரை நேரடியாக சான்றிதழ் பெற்று சரிபார்க்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு வருமாறு:  மதுரை மாவட்ட எல்லீஸ் நகர் முறை சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பென்ஷன் தாரர்களுக்கு ஆண்டுதோறும் உயிர் சான்று கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில், தொடர்ந்து பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் திங்கள் முதல் உயிர் சான்றிதழ் ஆன்லைனில் பதிவேற்ற செய்ய வேண்டும் என சமூக பாதுகாப்பு நல  வாரிய அலுவலக அதிகாரிகள் தெரிவித்த னர். தற்போது பென்ஷன்தாரர்கள் இவ்விச யம் தெரியாத நிலையில் நல வாரிய அலு வலகம் சென்று சான்றிதழ் ஒப்படைக்க செல்லும் போது அதை சரி பார்க்க மறுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் பென்ஷன்தாரர்கள் வீண் அலைச்சலுக்கும் பொருளாதார கஷ்டத்திற்கும் உள்ளா கின்றனர்.  எனவே ஆன்லைன் மூலம் உயிர் சான்றி தழ் அனுப்புவது நடைமுறைக்கு வரும் வரை எப்போதும்போல் நேரடியாக நல வாரியத்தில் உயிர் சான்றிதழ் பெறுவதை தாங்கள் தலையிட்டு உறுதிப்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.