districts

img

ஓட்டுநர்கள், நடத்துநர்களை பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக சிஐடியு போராட்டம்

மதுரை, செப்.11- வெளியூர் செல்லும் பேருந்துகளில் கிலோமீட் டரை கூட்டி பேருந்து இயக்க வேண்டும். ஓட்டுநர்,  நடத்துநரை பழிவாங்கக் கூடாது. மோட்டார் வாகனச்  சட்டத்தை மீறி செயல்படும் போக்கை கழக நிர்வாகம் கைவிட வேண்டும்  என வலி யுறுத்தி அரசுப் போக்கு வரத்து தலைமையகம் முன்பு கடந்த சில தினங்க ளுக்கு முன்பு அரசு  போக்கு வரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் சி.லெனின்,  துணைப் பொதுச் செயலா ளர் டி.கே. முரளீதரன், மாவட்டப் பொதுச் செயலா ளர் ஏ.கனகசுந்தர், சம்மேளன துணைத்தலைவர் வீ.பிச்சை உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர். ஓட்டுநர், நடத்துனர்கள் வார ஓய்வை ரத்து செய்து,  அதிக நேரம் பணி  பார்த்தால்  தான் விடுப்பு வழங்கப்படும் என்ற நிபந்தனையைக் கைவிட்டு. தேவையான வர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும். மண்டலங்களில் உள்ள கிளைகளுக்கு இடம்  மாறுதல் செய்யும் அதிகாரம்  அந்தந்த பொது மேலாள ருக்கு வழங்க வேண்டும். இட மாறுதல் விடுப்பு அனு மதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் லஞ்சம்-ஊழ லுக்கு இடம் கொடுக்கக் கூடாது.   ஜனநாயக முறை யில் போராட்டங்கள் நடத்  திய தொழிற்சங்க தலை வர்களைப் பழிவாங்கும் நட வடிக்கைகளில் ஈடுபடு வதைக் கைவிட வேண்டும்.  தரமான உதிரி பாகங்களைப் போக்குவரத்துக் கழகங்க ளுக்கு வழங்கவேண்டும். மதுரைக் கழகத்தில் தொழிற்  சங்கங்களுக்கும் நிர்வாகத் திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த ஷரத்துகள் தொடர்ந்து மீறப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என அரசு  போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) வலியுறுத்தி வருகிறது  என்பதும் குறிப்பிடத்தக்கது.