districts

img

கூட்டுறவுத்துறை நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

மதுரை, மார்ச் 9-  தமிழக அரசின் உணவுத் துறை, கூட்டுறவுத்துறையின் கீழ் பணியாற்றும் நியாய விலைக் கடை பணியாளர்களை கொத்தடி மைகளைப் போல் நடத்துவதை கை விட வேண்டும். நீண்ட நாட்க ளாக உள்ள சர்வர் பிரச்சனையை சரி செய்து பொதுமக்களுக்கு தடையின்றி பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயவிலைக்கடை பணியா ளர்களுக்கு அரசு அறிவிக்கின்ற வருடாந்திர, ஊதிய உயர்வு, புதிய ஊதிய உயர்வு, தேர்வு நிலை - சிறப்பு தேர்வு நிலை, கூடுத லான பணிக்கு உண்டான ஊதி யம் போன்றவை மாவட்டம் முழு வதிலும் உள்ள நியாய விலைக் கடை பணியாளர்களின் கை களில் சென்று சேர்வதை உறு திப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழக கூட்டு றவு சங்க ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு  கூட்டுறவு ஊழியர் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் முனி யாண்டி தலைமை வகித்தார்.  சங்க மாவட்ட பொதுச்செயலா ளர் இரா. லெனின், பொருளா ளர் துரைப்பாண்டி ஆகியோர் பேசினர். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் இரா. தெய்வராஜ் சிறப்புரையாற்றினார். புறநகர் மாவட்ட நிர்வாகி ஆஞ்சி ஆத ரித்துப் பேசினார். ஆர்ப்பாட்டத் தில் ரேசன் கடை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.