districts

img

மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக இராமநாதபுரத்தில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம்,நவ.26-  மோட்டார் வாகனச் சட்  டத் திருத்தத்தைக் கண்டித் தும் இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் இராமநாத புரம் மாவட்டத்திற்குள் அப ராதங்கள் விதிக்கக் கூடாது. ஆன்லைன் அபராதத்தை நிறுத்தி வைக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை தமிழகத்தில்  அமல் படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்டோ தொழிலா ளர் சங்கம் (சிஐடியு), இராம நாதபுரம் மாவட்ட தனியார்  மோட்டார் வாகன தொழிலா ளர் சங்கம் (சிஐடியு) சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலை வர் டி.ராஜா தலைமை வகித்  தார். சிஐடியு மாவட்ட தலை வர் எஸ்.ஏ.சந்தானம் துவக்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஆர். வாசுதேவன், அ.சுடலைக் காசி, எம்.மலைராஜன், தனி யார் மோட்டார் சங்க மாவட்ட தலைவர் எம்.மணிகண்ணு, செயலாளர் எஸ்.ஆனந்த், ஆட்டோ சங்க மாவட்ட செய லாளர் ஆர். முனியசாமி ஆகி யோர் விளக்கிப் பேசினர். சிஐ டியு மாவட்டச் செயலாளர்  எம்.சிவாஜி நிறைவுரை யாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் சிஐ டியு மாவட்ட துணை தலை வர் எம்.அய்யாதுரை, ஆட்டோ  சங்க மாவட்ட பொருளா ளர் எம் ரமேஷ், இராமநாத புரம் நகர தலைவர் ஏ.மாரிச் சந்திரன் எம்.கண்ணன், தனி யார் மோட்டார் வாகன சங்க மாவட்ட பொருளாளர் முரு கன் உட்பட 200க்கும் மேற்  பட்ட ஆட்டோ தொழிலா ளர்கள், தனியார் மோட்டார் வாகன சங்க தொழிலாளர் கள் பங்கேற்றனர்.

;