பொது மக்களுக்கு இடையூறாகவும் சட்ட விதிகளுக்கு புறம்பாகவும் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மற்றும் பாம்பன் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி சிஐடியு சார்பில் டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சிவாஜி தலைமை வகித்து, உரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சந்தானம், மாவட்ட பொருளாளர் ஆர்.முத்துவிஜயன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.