மதுரை, அக்.18- தமிழக அரசு தொழிற் சங்கங்களை அழைத்து பேசி போனஸை அறிவித்திட வேண்டும், கொரோனாவை காரணம்காட்டி போனஸை குறைக்கக்கூடாது.போக்கு வரத்து, மின்சாரம் , கூட்டு றவு, டாஸ்மாக் , சிவில் சப்ளை குடிநீர் உள்ளிட்ட மாநில பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு அருகில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர்.இரா.தெய்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எம்.பாலசுப்பிர மணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் இரா.லெனின் நிறைவுரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் ஜே.லூர்து ரூபி, மாவட்ட நிர்வாகிகள் சி. சுப்பையா, ஆர்.பாண்டி, எம். துரைச் சாமி உள்பட ஆவின், கூட்டு றவு, டாஸ்மாக், சிவில் சப்ளை ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.