தேனி, நவ.26- தொழிலாளர் நீதிமன்ற உத்தரவுப்படி தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தி சிஐடியு பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலை வாயில் முன்பாக சனிக்கிழமை யன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தேனி அண்ணா கூட்டு றவு மில்லில் பல ஆண்டு களாக தற்காலிக பணியாளர் கள் பணியாற்றி வருகிறார் கள். தற்காலிக பணியாளர் களை நிரந்தரம் செய்ய உத் தரவிடக் கோரி சிஐடியு சார் பில் தொழிலாளர் நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது .அதனைத் தொடர்ந்து நீதி மன்றம் தற்காலிக பணியா ளர்களை நிரந்தரம் செய்ய உத்தரவிட்டது. அண்ணா கூட் டுறவு நிர்வாகம் பணி நிரந்த ரம் செய்ய மறுத்து வந்தது. எனவே தொழிலாளர் நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த பணிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் கிளைச் செயலாளர் சரவணன் தலைமை வகித் தார். சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. செல்வராஜ், சிஐ டியு தேனி மாவட்ட தலைவர் டி . ஜெயபாண்டி, மாவட்ட பொருளாளர் ஜி.சண்முகம், மாவட்ட துணை செயலா ளர் எஸ்.ராமர் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றி னார். ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் கலந்து கொண்ட னர்.