குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம்
கூலி உயர்வு கேட்டு குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் செவ்வாயன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஏஐசிடியு பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஏஐசிடியு மாவட்ட செயலாளர் மணி வேல் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமாரபாளையம் நகர செயலாளர் என்.சக்திவேல் வாழ்த்தி பேசினார். இதில், எல்டியுசி கோவிந்தராஜ், எச்எம்எஸ் செல்வ ராஜ், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். ஏஐசிசிடியு சுப்பிரமணி நன்றி கூறினார்.
பள்ளிபாளையம், பிப்.7- பள்ளிபாளையம் பகுதியில் பணியாற்றும் விசைத்தறி தொழி லாளர்களுக்கு 75 சதவிகித கூலி உயர்வு வழங்கக்கோரி சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத் தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் காவேரி ஆர்.எஸ். சிஐடியு அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க பள்ளிபாளையம் ஒன்றியக் குழு கூட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத் தின் ஒன்றிய உதவித்தலைவர் அங்கமுத்து தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட செய லாளர் எம்.அசோகன், மாவட்ட தலைவர் கே.மோகன், பள்ளி பாளையம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பள்ளி பாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந் தமானது, கடந்த 2021 ஆண்டுடன் நிறைவடைந்துவிட்டது. இதை யடுத்து 75 சதவிகித கூலி உயர்வு மற்றும் இரவு நேரம் பணிபுரியும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உணவு, தொடர்ந்து 24 மணி நேரம் வேலை செய்யும் முறை ரத்து, 8 மணி நேர வேலை, ஞாயிற்றுக் கிழமை வாராந்திர விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றி தரக்கோரி, சிஐடியு சார்பில் 14 விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்திற்கும் நேரில் மனு வழங்கப் பட்டது. மேலும், ஆட்டோ பிரச் சாரமும் நடைபெற்றது. 40 விசைத் தறிகள் மேல் வைத்திருக்கும் 35 நிறுவனங்களுக்கு, நேரில் மனு கொடுக்கப்பட்டது. கடந்தாண்டு சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில், தொழில் தாவா கிளப்பப்பட்டு, 6 முறை அவர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், விசைத்தறி உரிமை யாளர்கள் கூலி உயர்வு குறித்து பேசுவதற்கு வரவில்லை.
இத்தகைய தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கட்ட ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திலும் கூலி உயர்வு கோரிக் கைகளை குறித்து மனு வழங்கப் பட்டது. இந்நிலையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் துறையும், விசைத் தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கையை உரிய முறையில் பேசி தீர்வு காண வேண்டும். முத்தரப்பு பேச்சு வார்த்தையை நடத்தி பிப்.26 ஆம் தேதிக்குள் பேசி தீர்க்க வேண்டும். தீர்வு ஏற்படாத பட்சத்தில், பிப்.27 ஆம் தேதியன்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது எனவும், இதனை யொட்டி பள்ளிபாளையம் வட்டார பகுதி முழுவதும் தெருமுனை கூட்டம், ஆட்டோ பிரச்சாரம், தர்ணா போராட்டம் மற்றும் கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வருகிற பிப்.20 ஆம் தேதியன்று பெருந்திரளான விசைத்தறி தொழிலாளர்களை திரட்டி, பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதிக்கு பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளிபா ளையம், குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலை நம்பி நேரடி யாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழி லாளர்கள் பணியாற்றி வருகின் றனர். மேலும், குமாரபாளை யத்தில் கடந்து ஒரு வார கால மாக கூலி உயர்வு கோரிக்கைக களை வலியுறுத்தி, விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர் என்பது குறிப்பிடத்தக்கது.