districts

img

மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது

மதுரை, டிச.13-  தமிழ்நாட்டில் மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது. கேரள அரசைப் போல் ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும்.போக்குவரத்து காவல்துறை ஸ்பார்ட் ஃபைன்  அநியாய அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். ஆட் டோக்களை சிறைப்பிடிப் பதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை நகர் சிஐடியு ஆட்டோ தொழி லாளர்கள் சங்கம் சார்பில் டிசம்பர் 13 செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட பொருளாளர் கே.அறிவழகன் தலைமை வகித்தார். சிஐடியு  மாவட்டச் செயலாளர் இரா.லெனின், மாவட்ட துணைத் தலைவர் ஜி. ராஜேந்திரன் ஆதரித்துப் பேசினர். சங்கத் தின் மாவட்ட  பொதுச்செய லாளர் என்.கனகவேல் விளக்கிப் பேசினார். சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர். தெய்வராஜ் நிறைவு ரையாற்றினார்.