சேலம், அக். 29- இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு வின் 15 ஆவது மாநில மாநாடு குமரியில் நடைபெறுவதையொட்டி சேலம் சிறைத் தியாகிகள் நினைவு ஜோதி சேலத்திலிருந்து குமரி நோக்கி புறப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) 15 ஆவது மாநில மாநாடு வரும் 4,5,6, ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத் தில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் உழைக்கும் வர்க்கத்திற்காக உயிரை தியாகம் செய்த தியாகிகள் ஜோதி ஏற்றப்பட உள்ளது. மாநிலம் முழுவதுமிருந்து இத்த கைய தியாகிகளின் ஜோதி பயணம் சிஐடியு மாநாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. சேலம் சிறையில் இருந்த அரசியல் கைதி களுக்கு உரிய கவுரவத்தை தர வேண்டும் என்று வலியுறுத்தி 1950 ஆம் ஆண்டு செங்கொடி இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். அவர்கள் மீது பிப்ரவரி 11 ஆம் தேதி வெறித்தன மாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அர சியல் கைதிகளாக இருந்த செங்கொடி இயக்கத்தை சேர்ந்த 300க்கும் மேற் பட்டவர்களை மைதானத்தில் நிறுத்தி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலியாகினர். அந்த சேலம் சிறைத் தியாகிகளின் தியாகத்தை செங்கொடி இயக்கம் தொடர்ந்து முன்னெடுத்து வரு கிறது.
இதன்ஒருபகுதியாக சேலம் சிறை தியாகிகள் நினைவு ஜோதி சிஐடியு மாநில மாநாட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சேலம் மத்திய சிறை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலைப்போக்குவரத்து சங்கத் தின் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் ஜோதியை எடுத்து கொடுத்தார். சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் டி.உதயகுமார் ஜோதியை பெற்று பயணக் குழுவிற்கு தலைமை தாங்கினார். ஜோதிப்பயணம் சேலம் மெய்யனூர் போக்குவரத்து பணிமனை முன்பு போக்கு வரத்து சங்க பொதுச் செயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், சூர மங்கலம் உழவர் சந்தை பகுதியில் சிஐடியு மாநில குழு உறுப்பினர் பி. பன்னீர்செல்வம் தலைமையிலும், ஓமலூர் பேருந்து நிலை யம் பகுதியில் பட்டு கைத்தறி மாவட்டச் செய லாளர் எஸ். சண்முகம் தலைமையிலும், தீவட்டிப்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் ஆட்டோ சங்க நிர்வாகி எம்.வடிவேல் தலை மையிலும் ஜோதிப்பயணம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன் மாநில குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி வி. இளங்கோ, மாநிலத் துணைச் செயலாளர் ஆர்.சிங்காரவேல், சி. நாகராஜ் கிருஷ்ணகிரி சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். வாசுதேவன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து ஜோதிப்பயணம் தருமபுரி மாவட்டம் சென்றடைந்தது.