districts

img

பஞ்சம்பட்டியில் சித்தமருத்துவ முகாம்

சின்னாளபட்டி, ஏப்-27- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டியில்  இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோத்துறை, சித்தமருத்துவப்பிரிவு மற்  றும் அரசு ஆரம்ப சுகாதார  நிலையம் சார்பில்  75வது  சுதந்திரதின அமுதப்பெரு விழா சித்தமருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ரபீக் அகமது தலைமை தாங்கினார். பஞ்சம்பட்டி பங்குத்தந்தை ரிச்சர்டு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர்  ஆனந்தீஸ்வரி வரவேற்றார்,  முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு உடல்பரிசோதனை செய்து மாத்திரை,மருந்துகள் வழங்கப்பட்டன. முகாமில் சித்தமருத்துவர்கள் சுஜாதா, ஹசீனா பர்வீன், நாடிமுத்து, மருதமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.