districts

img

மதுரையில் குழந்தைகள் தின விழா

மதுரை, நவ.14- மதுரை மாவட்டம் கள்ளிக்  குடி ஒன்றியம் மையிட்டான் பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி யில் திங்களன்று குழந்தைகள் தின விழா பள்ளி யின் தலைமையாசிரியர் ச.ஆதி நாராயணன் தலைமையில் நடைபெற்றது. அனைத்து ஆசி ரியர்களும் மாணவ மாணவி யர்களும் கலந்து கொண்டனர்.  சிறப்பு விருந்தினராக  எல்ஐசியில் பணியாற்றி ஓய்வு  பெற்ற அதிகாரி ராமசாமி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய மாற்றுத்  திறன் கொண்ட குழந்தைகளுக் கான சிறப்பாசிரியர் ரீட்டா உள் ளிட்ட பலர் கலந்துகொண்டு  பங்கேற்று குழந்தைகள் தின விழாவின் சிறப்புகளையும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்தும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான தரமான கல்வி, பாதுகாப்பு அரசு நலத்திட்டங்கள் குறித்தும்  கருத்துரையாற்றினர். நிகழ் வில் கலந்து கொண்ட அனை வரும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்தும் மாற்  றுத்திறன் கொண்ட குழந்தை கள் சார்ந்த சிறப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.மேலும் பள்ளியில் பயிலும் குழந்தை களுக்கு  பேச்சுப்போட்டி, கட்டு ரைப்போட்டி,  ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங் கப்பட்டது. ஆசிரியர் மாரிமுத்து  நன்றி கூறினார். திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூர் சிஎஸ்ஐ துவக்கப்பள்ளி வளாகத்தில் குழந்தைகள் தின விழா கொண்  டாடப்பட்டது . இதில் பேராயர் மகாகனம், நிர்வாகி ஜெயசிங் பிரின்ஸ் பிர பாகரன், வட்டாரக் கல்வி அலு வலர் செல்வ லட்சுமி தலைமை ஆசிரியர் அனிட்டா செலின், ஆசிரியர்கள் டேவிட் சகாய  ராஜா, ஜெனிபா,  மக்கள் சேவை  மையம்   தலைவர் எம். திரு மூர்த்தி, பெ.பாலகிருஷ்ணன், பொருளாளர் எம்.தனலட்சுமி, இணைச் செயலாளர் என்.திருப்பதி, உட்பட பலர் பங்கேற்ற னர். விழாவில்  ஜவஹர்லால் நேரு வேடமனிந்த மாணவர் கள் நேரு பற்றி பேசினர்.