மதுரை,டிச.9- மதுரை பெருங்குடி விமான நிலைய நுழைவு வாயில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வெண்கல திருவுருவச் சிலையினை டிசம்பர் 9 வெள்ளியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்தார். அமைச்சர்கள், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.