சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியியல் துறை மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து முதல் உதவி நோக்கு நிலை பயிற்சியை உயர் தொழில்நுட்ப அரங்கில் வைத்து நடத்தியது. குலசேகர பெருமாள் பிள்ளை தலைமையில் இளைஞர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். தி. ராஜ் பிரவின், இந்திய செஞ்சிலுவை சங்க தமிழக கிளை பயிற்சியாளர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் து. பெஞ்சமின் மற்றும் கல்வியியல் துறை மூத்த பேராசிரியர். முனைவர் மோகனா, கல்வியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் மாணிக்கவாசகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.