சின்னாளப்பட்டி, மே 19- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது . மாணவர் ஆகாஷ் சிவராம் 481 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் மாணவர் விக்ரம் 480 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும் மாணவி ஹர்ஷினி ஸ்ரீ 477 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மாணவ, மாணவியர்களை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் அறங்காவலர் திலகம்,மேலாளர் பாரதிராஜா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்தினர்.