திருவில்லிபுத்தூரில் திமுக நகர கழகம் சார்பில் பேராசிரியர் க அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பேருந்து நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு நகர் கழக செயலாளர் ஜி ஜி அய்யாவு பாண்டியன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ரவிக்கண்ணன், துணைத் தலைவர் செல்வமணி மற்றும் திமுக நகர மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.