districts

img

விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளிப்பூங்கா விளைநிலமும், சுற்றுச்சூழலும் பாதிக்கக்கூடாது

விருதுநகர், அக்.10- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, தாம ரைக்குளம் பகுதியில் ஒன் றிய அரசின்  சார்பில், ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் தொழில் பூங்கா அமைய உள்ளது. ஜவுளிப் பூங்கா என்ற  பெயரில் விவசாய நிலத்தை யும், சுற்றுச் சூழலையும் பாதிக்கும் சாயப்பட்டறை தொழிற்சாலை அமைக்கும் முயற்சி அங்கு நடைபெறு கிறது. இதைக்  கைவிட வேண்டுமென வலியுறுத்தி  சிபிஐ சார்பில் நடை பய ணம்- ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்ட  சிபிஐ மாநிலச் செயலாளர் முத்த ரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாத்தூர் ஜவுளிப் பூங்கா விற்கு நிதி  தாமதமின்றி  ஒதுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம், தீப்பெட்டி, பட்டாசு ஆலை, அச்சு, கைத்தறி, விசைத்தறி, பேண்டேஜ், பஞ்சாலைத் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும். ஒன்றிய அரசு அறிவிப்  போடு எல்லாத் திட்டங்களை யும் நிறுத்தி விடுகிறது குறிப்  பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட  எந்தத் திட்டமாக இருந்தா லும் சுற்றுச்சுவர் எழுப்பு வதோடு  நின்றுவிடுகிறது. ஒன்றிய அரசு எட்டாண்டு காலத்தில் 16 ஆயிரம் பேருக்  குக் கூட வேலை வழங்க வில்லை. ஆனால்,  கார்ப்ப ரேட் முதலாளிகளை வள மாக்குகிறது. அவர்களுக்கு நிதியை வாரி, வாரி வழங்கு கிறது. லால்பகதூர் சாஸ்திரி பிர தமராக இருந்த மூன்று வரு டங்களில்  மூன்று பொதுத் துறை நிறுவனங்களை உரு வாக்கினார். பிரதமர் மோடியோ,  அரசு பொதுத்துறை நிறுவ னங்கள் ஒன்றைக்கூட உரு வாக்கவில்லை. இருக்கும்  பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு விற்று வருகிறார்.  மக்கள்  பிரச்சனைகள் மீது மோடிக்கு அக்கறையில்லை என்றார். முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பொ.லிங்கம், சட்டமன்ற முன்னாள்  உறுப்  பினர் தி.ராமசாமி, மாநி லக்குழு உறுப்பினர் வி. பாலமுருகன், ஒன்றியச் செயலாளர் சக்கணன்  உட் பட பலர் பங்கேற்றனர்.