districts

மதுரை முக்கிய செய்திகள்

மீனவரை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு

களியக்காவிளை, அக். 1: மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக் கடை, ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் சகாயராஜ் (57). மீனவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வர் அருள்தாஸ் (50) என்ப வருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று சகாய ராஜ் வீட்டருகே நின்று கொண்டிருந்தார். அப் போது அங்கு வந்த அருள் தாஸ் மற்றும்  அவரது மகன் அஜித் (22) ஆகி யோர் சகாயராஜை தகாத  வார்த்தைகள் பேசி தக ராறு செய்ததுடன் அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சகாயராஜ் மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். இது குறித்து மார்த்தாண்டம் காவல் துறையினர் அருள்தாஸ் மற்றும் அவரது மகன் அஜித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேல்புறம் வட்டாரத்தில் சிபிஎம் கிளை மாநாடுகள்

அருமனை, அக். 1- கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. மருதங்கோடு ஏ கிளை மாநாட நடைபெற்றது அதில் கிளை செயலாளராக  றூஸ்பெல்ட்ராஜதாஸ் தேர்வு செய்யப்பட்டார். புளி மூடு மாதர் கிளை செயலாளராக ஜாயிஸ், மருதங்கோடு மாதர் கிளை  செயலாளராக ஷைலஜா, நடப்பாறை கிளை செயலாளராக திலகன், கல்லாம் பொற்றை மாதர் கிளை செயலாளராக ஷீபா, மூப்புகளை கிளை செயலாளராக ரஞ்சித், நுள்ளிக்காடு கிளை செயலாளராக ஏசுராஜ், புத்தன் சந்தை கிளை செயலாளராக ஞான தாஸ் தேர்வு செய்யப்பட்டனர். பொற்றை கிளை  மாநாடு நடந்தது அதில் செயலாளராக ஜஸ்டின் தேர்வு செய்யப்பட்டார். கண்ணாங்கோடு கிளை செயலாளராக ஜெரின் ராஜ், முதப்பன் கோடு கிளை செயலாளராக ரஞ்சித், கோதாலி விளை கிளை செயலாளராக ராபர்ட்,  ஆலு விளை கிளை செயலாளராக ஜீவராஜ், பரகோணம் கிளை செயலாளராக சந்திரகோபால், ஆலம்பாறை ஏ கிளை செயலாளராக ராபர்ட் நெல்சன், ஆலம்பாறை சி.கிளை செயலாளராக முகேஷ் தேர்வு செய்யப்பட்டனர். நுள்ளி விளை மாதர் கிளை செயலாளராக புஷ்பகுமாரி, வட்ட விளைமாதர் கிளை செயலாளராக விஜயா, பருத்தி விளை மாதர் கிளை செயலாளராக சுபா, கடை விளை மாதர் கிளை செயலாளராக ஸ்டெல்லா, அமலாபுரம் மாதர் கிளை செயராளராக தேவநேசம், குறிச்சி கோணம் கிளை செயலாளராக தாசையன், கடை விளை கிளை செயலாளராக மரியதாஸ் தேர்வு செய்யப்பட்டனர்.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை  கூட்டம்

நாகர்கோவில், அக்.1- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்க ளுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் இன்று  காலை 11 மணியள வில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும்.  வளர்ச்சித் திட்டங்கள், ஊராட்சியின் முந்தைய ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கின் மீதான தணிக்கை குறிப்புகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.  மேலும் அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொது மக்களுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்க ளும் இக்கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். எனவே  பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

உடைந்த குளத்தை உடனடியாக சரி செய்ய கீழ புது குளம் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி, அக்.1- தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின் போது உடைந்த ஏரல் தாலுகா கீழ புது குளம் கிராமத்தை சேர்ந்த குளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் அமைந்துள்ளது கீழ புதுக்குளம் கிராமம் இந்த கிராமத்தில் உள்ள குளம் தாமிரபரணி ஆற்றுப் பாசனம் மேல கால் பகுதியில் அமைந்துள்ள கடைசி குளமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இந்த குளம் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்து கிராம மக்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன . இந்நிலையில் ஓராண்டு ஆகியும் இந்த குளத்தை முறையாக சீரமைக்க பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதன் காரணமாக மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் மீண்டும் குளம் உடைப்பு ஏற்பட்டு விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத  சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு மழை வெள்ளத்தில் சேதமான புதுக்குளம் கிராம குளத்தை உடனடியாக சிமெண்ட் சுற்றுச்சுவர் அமைத்து குளத்தில் உடைப்பு ஏற்படாமல் கரையை பலப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த குளத்தை நம்பி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் மற்றும் வாழை விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் உள்ளனர். எனவே வரக்கூடிய மழைக்காலத்திற்கு முன்பாக இந்த குளத்தை போர்க் கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் செந்தூர் பாண்டி, சிபிஎம் ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றம்; 12ஆம் தேதி சூரசம்ஹாரம்

தூத்துக்குடி, அக். 1- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்.3 வியாழனன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 12ஆம் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 12-ஆம் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும். 11-ஆம் திருநாளான 13-ஆம் தேதி மாலையில் அம்மனுக்கு காப்பு களையப்பட்டவுடன் பக்தர்களும் காப்பு களைந்து விரதத்தை முடிக்கின்றனர். விழாவின் நிறைவு நாளான 14-ஆம் தேதி காலையில் சிறப்பு அபிேஷக ஆராதனைகள், மதியம் சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், உதவி ஆணையர் செல்வி, இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், ஆய்வாளர் பகவதி, அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி ஆகியோர் செய்து வருகின்றனர்.

ஹாக்கி போட்டி: கோவில்பட்டி அரசு கல்லூரி முதலிடம்

கோவில்பட்டி, அக். 1- கோவில்பட்டி கே.ஆர். கலை-அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி அரசுக் கல்லூரி முதலிடம் பிடித்தது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான இப்போட்டி கடந்த வெள்ளி, சனி ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் 1-க்கு 0 என்ற கோல்கணக்கில் எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி அணியை கோவில்பட்டி அரசு கலை-அறிவியல் கல்லூரி அணி வென்று முதலிடம் பிடித்தது. கோவில்பட்டி கே.ஆர். கலை-அறிவியல் கல்லூரி அணி 3ஆம் இடத்தையும், பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி அணி 4 ஆம் இடத்தையும் பிடித்தன. பரிசளிப்பு விழாவுக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர். அருணாச்சலம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் இயக்குநர் ஆறுமுகம், பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜாசிங், ரோக்லகண்ட், துணை ஒருங்கிணைப்பாளர் ஜெய்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.