மதுரை அமெரிக்கன் கல்லூரி டேனியல் ஃபூர் நினைவு நூலகத்தில் செந்தமிழ் வளர்த்த செந்நாப்புலவர் கார்மேகக் கோனார் அவர்களின் உருவப் படத்திறப்பு விழா நடைபெற்றது. கார்மேகக் கோனாரின் பேத்தி முனைவர் அழகி கார்மேகம் முன்னிலையில், அவரது உருவப் படத்தினைக் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் ம. தவமணி கிறிஸ்டோபர் தலைமையேற்றுத் திறந்து வைத்து உரையாற்றினார்.