districts

கச்சத்தீவை மீட்கக்கோரும் வழக்கில் தலையிட முடியாது: நீதிபதிகள் கருத்து

மதுரை, ஆக.31-  கச்சத்தீவை மீட்கக் கோரிய வழக்கில் “கச்சத்தீவு மீட்பு விவகாரம் ஒன்றிய அரசின்  கொள்கை ரீதியான முடிவு” அதில் நீதி மன்றம் தலையிட முடியாது சென்னை உயர்  நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பீட்டர் ராயன்,  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,  “இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்  தீவு இராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின்னர் இந்தியா மற்றும்  இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கை யின் படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்ப டைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின் படி பாரம்பரி யமாக மீன் பிடிப்புத் தொழிலில் ஈடுபடும்  மீனவர்கள் எந்த இடையூறும் செய்யக் கூடாது என உள்ளது. 1983-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம்  ஆண்டு வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என ஆர்டிஐ தகவல் உள்ளது. இதுவரை தமிழக மீனவர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை இழந்துள்ளனர். அதன் பின்பு 2013-ஆம் ஆண்டு 111 மீன வர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 19-ஆம் தேதி ஒன்பது  மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர் தற்போது ஜூலை 21-ஆம் தேதி 22 இந்திய  மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். 1974-ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையை இலங்கைக் கடற்படையினர் மீறியுள்ளனர். எனவே, இடைக்கால உத்தரவாக 22  மீனவர்களை இந்தியா கொண்டுவர உட னடியாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க  உத்தரவிட வேண்டும். மேலும், 1974-ஆம்  ஆண்டு இந்தியா-இலங்கை இடையே யான உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான நடவ டிக்கையை ஒன்றிய அரசு எடுக்க உத்தர விட வேண்டும்.” எனக் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கங்க பூர்வலா அமர்வில் வியாழனன்று விசார ணைக்கு வந்தது. விசாரணையின் போது ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்  விடுவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித் தார் தொடர்ந்து நீதிபதிகள் கச்சத்தீவு மீட்பு  விவகாரம் ஒன்றிய அரசின் கொள்கை ரீதி யான முடிவு இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.