தேனி, மார்ச் 14- விளைபொருளுக்கு ஆதாரவிலை, குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி ஏப்ரல் 5 அன்று நடை பெறும் நாடாளுமன்ற பேர ணியை விளக்கி சிஐடியு, விவ சாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. தேனி அல்லிநகரத்தில் துவங்கிய நடைபயண பிரச்சார இயக்கத்தை கட்சி யின் மூத்த தலைவர் பா.ராம மூர்த்தி துவக்கி வைத்தார் .சிஐடியு தலைவர் இ.தர்மர் ,விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் வி.ராஜேந்திரன் , விவசாயத்தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் கே. பாஸ்கரன் ஆகியோர் தலைமை வகித்தனர் . தேனி நகர் , பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, ஆதி பட்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் பிரச் சாரம் நடைபெற்றது .வாலி பர் சங்க மாவட்ட செயலாளர் சி.முனீஸ்வரன், சிஐடியு மாவட்ட தலைவர் டி.ஜெய பாண்டி, பொருளாளர் ஜி.சண் முகம், பி.பிச்சைமணி ,விவ சாயிகள் சங்க செயலாளர் ஆர்.பொன்னுத்துரை, விதொச செயலாளர் கண் ணன், டி.நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . தேவாரம் ,பண்ணைபுரம் ,பல்லவராயன்பட்டி ,மேல சிந்தலைச்சேரி, லட்சுமி நாயக்கன்பட்டி, ஏரணம் பட்டி, தேவாரம் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு தலை வர் டி.ராஜா ,விவசாயிகள் சங்க செயலாளர் எஸ். சுருளிவேல், விவசாயத் தொழிலாளர் சங்க மாநி லக்குழு உறுப்பினர் பெரு மாள் ஆகியோர் தலைமை வகித்தனர் .விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.வேலவன் , சோணைமுத்து ,எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . வத்தலக்குண்டில் நடை பெற்ற பிரச்சாரத்தில் சிஐ டியு மாவட்ட துணைத்தலை வர் அழகர்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் குணசீலன் ஆகியோர் பேசினர்.