மதுரை, மே 17- டிராய் அமைப்பின் என்டிஓ-3 பரிந்துரை யை நிறுத்தி வைத்து கேபிள் டிவி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், இணைய வயர்களை எடுத்துச் செல்லும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கட்டண குறைப்பை அறிவித்தது போல கேபிள் டிவிக்கும் அறி வித்திட வேண்டும். கட்டண உயர்வு குறித்து ஆப்ரேட்டர்களின் கருத்துக்களை கேட்கும் வகையில் ஆப்ரேட்டர்களை கொண்ட குழு அமைத்து செயல்பட வேண்டும். வாக்குறுதி அளித்தபடி கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் மே 17 புதனன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.வி. ரமேஷ் தலைமை வகித்தார். இதில் மதுரை, தேனி, திண் டுக்கல், இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலந்துகொண்டனர்.