districts

img

புதல்வன் மா.சக்திவேல்-முப்பிடாதி(எ) குட்டியம்மா ஆகியோரின் திருமண விழா

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டயப் பொறியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து-குமரேஸ்வரி ஆகியோரின் புதல்வன் மா.சக்திவேல்-முப்பிடாதி(எ) குட்டியம்மா ஆகியோரின் திருமண விழா நடைபெற்றது. விருதுநகரில் லட்சுமியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறன்மிகு  உதவியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சீனிவாசன், மாநிலப் பொதுச் செயலாளர் சி.குருசாமி, மாநில பொருளாளர் ஏ.சாலமன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கத்தின்  மாநிலத்  தலைவர் மதனமுசாபர், மாநில பொருளாளர் பூபாலசிங்கம் ஆகியோரும், தமுஎகச மாநில மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச்செல்வன், சிபிஎம் நகர் செயலாளர் எல்.முருகன் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர். மணமக்களின் பெற்றோர்கள் நன்றி கூறினர்.