மதுரை, ஜூன். 1-
பிஎஸ்என்எல் நிறுவனம் 4 ஜி, 5ஜி சேவைகளை துவக்கிட விரைவாக நடவடி க்கை எடுக்க வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்க ளுக்கு 01.01.2017 முதல் வழங்கப்பட வேண்டிய 3வது ஊதியத் திருத்தம் அமல்படுத்துவதில் ஏற் பட்டுள்ள தடைகளை அகற்றி விரைவாக வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வே ண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் பிஎஸ்என்எல் எம்பிளாய்ஸ் யூனியன் சார்பில் வியாழனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
பீ. பி.குளம் முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சி. செல்வின் சத்யராஜ் தலை மை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரிச்சர்ட், மாநில நிர்வாகி அண்ணாதுரை ஆகியோர் பேசினர். கிளைச் செயலாளர் நாகேந்தி ரன் மற்றும் பலர் பங்கேற்ற னர்.