அரசு, மாவட்ட நிர்வாகம் தலையிட வலியுறுத்தல்
செம்மண் எடுக்க அனுமதி வழங்கப்படாததால் மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியம் எம்.கல்லுப்பட்டி பகுதியில் பல்வேறு செங்கல் சூளைகள் இயக்கப்படாமல் வெறிச்சோடியுள்ளன. துள்ளுக் குட்டிநாயக்கனூர், மல்லப்புரம், சூலப்புரத்தில் 6 ஆயிரம் செங்கல் சூளை தொழிலாளர்களின் குடும் பங்கள் வாழ்வாதாரம் இழந்து, தவிக் கின்றனர். இப்பிரச்சனையில் அரசும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு, தீர்வுகாண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நாள்தோறும் ஏராளமான கட்டி டங்கள் முளைக்கின்றன. இந்த கட்டி டங்களின் கட்டுமானப்பணிகளில் முக்கியப் பொருளாக திகழ்வது செங்கல். செம்மண், கண்மாய் பகு திகளில் உள்ள கரம்பை மண் ஆகி யவற்றைக் கலந்து, செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. செங்கல் சூளைகளில் செங்கல்லை தயாரிக் கும் வேலையில் பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள னர். செங்கற்களை அடிப்படையாகக் கொண்டே கட்டுமானத் தொழில் உள்ளது. மேலும் லாரி, டிராக்டர், டிப்பர் உள்ளிட்ட வாகன ஓட்டுநர் கள், கிளீனர்கள், கட்டுமானத் தொழி லாளர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த தொழிலை சார்ந்து உள்ளனர்.
ஓராண்டுக்கும் மேலாக இயங்காத செங்கல் சூளைகள்
மதுரை மாவட்டம் துள்ளுக்குட்டி நாயக்கனூர்,மல்லப்புரம்,சூலப்புரம் ஆகிய பகுதிகளில் 170-க்கும் மேற் பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. செம்மண் எடுக்க அனுமதி வழங்கப் படாததால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த செங்கல் சூளைகள் இயக்கப்படாமல் உள்ளன. இத னால் இந்த தொழிலை மட்டுமே நம்பி யுள்ள தொழிலாளர்கள் வேலை யின்றி,வருமானமின்றி தவிக்கின்ற னர். ஒரு செங்கல் சூளையில் கல் அறுப்பது, கல் ஏற்றுவது என 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். செங்கல் சூளைகள் செயல்படாமல் உள்ளதால் 6 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் பரிதவிக்கின்றன. துள்ளுக்குட்டிநாயக்கனூர்,மல்லப்புரம்,சூலப்புரம் ஆகிய பகுதிகளில் செங்கல் சூளைகளுக்கு செம்மண் எடுக்க அனுமதி வழங்கப்படாததால், வெளிமாவட்டங்களுக்குச் சென்று ஒரு லோடு செம்மண் 16 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்கி வருவதாகவும் உள்ளூரில் ஒரு லோடு செம்மண் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்றும் 16 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி செங்கல் தயாரிப்பதால் எந்த லாபமும் இல்லை. தொழிலாளர்களுக்கு சம்ப ளம், வாகன வாடகை, விறகுகள் வாங்கவும் செலவு செய்ய வேண்டும். பல்வேறு செலவுகள் செய்தும் நஷ்டம் தான் என்று செங்கல் சூளை உரிமை யாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு லோடு செம்மண் 5 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்தால் மட்டுமே தொழில் நடத்த முடியும். செம்மண் எடுக்க அனுமதி கோரி மனு அளித்தும் போராட்டங் கள் நடத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை. உத்தரவு வரவில்லை என்றும் தை மாதத்திற்குப் பிறகு பார்ப்போம் என்றும் பேரையூர் தாசில்தார் கூறுவதாக தெரிவிக்கின்றனர்.
அரசியல் பின்புலமா?
6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளை தொழிலாளர் குடும் பங்களின் வாழ்வுடன் சம்பந்தப் பட்டுள்ள இந்த தொழிலை நடத்த இப்பகுதிகளில் உள்ள 10 குவாரிகளில் செம்மண் எடுக்க உடனடியாக அனு மதி அளிக்க வேண்டும். பாப்பிநாயக் கன்பட்டி, எழுமலை கண்மாய்களில் கரம்பை மண் எடுக்க அனுமதி வேண் டும் என்று சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வலியுறுத்து கின்றனர். 10 குவாரிகளில் செம்மண் எடுக்க அனுமதி வழங்கப்படாததற்கு அரசியல் பின்புலம் இருப்பதாக சந்தேகிக்கின்றனர்.
போராட்டம் நடத்த சிபிஎம் முடிவு
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேடபட்டி ஒன்றியச் செயலாளர் பெ.ராஜா சங்கர், முன் னாள் ஒன்றியச் செயலாளர் என். ஜெயபால் , துள்ளுக்குட்டிநாயக்க னூர் கிளைச் செயலாளர் செல்வம் ஆகியோர் கூறுகையில், இப்பகுதி களில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பாகவும் வாழ்வாதாரமாகவும் உள்ள செங்கல் சூளை தொழிலுக்கு தேவையான செம்மண் எடுக்க உட னடியாக அனுமதியளிக்க வேண்டும். அரசும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து செம்மண் குவாரி களுக்கு அனுமதியளிக்க வேண்டும். இல்லையெனில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை திரட்டி மார்க்சி ஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
அனுமதி உத்தரவு வரவில்லை: தாசில்தார்
இப்பிரச்சனை குறித்து பேரை யூர் தாசில்தார் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், கடந்த ஒரு வருடமாக பேரையூர் தாலுகாவில் எந்த பகுதியிலும் மணல் எடுக்க அனுமதியளிக்கப்படவில்லை. மணல் எடுக்க அனுமதிக்குமாறு எந்த உத்தரவும் அரசிடமிருந்து வர வில்லை. அரசு உத்தரவு வந்த பின்னர் சட்டத்துக்குட்பட்டு மணல் எடுக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரி வித்தார். 6 ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வோடு சம்பந்தப் பட்டுள்ள பிரச்சனையில் அரசு இன்னும் மௌனமாக இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள தொழி லாளர்கள் மற்றும் அரசியல் கட்சி யினர், மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி,படங்கள்: உத்தண்ட் ராஜ், பா.ரணதிவே