தென்காசி, அக்.17- செங்கோட்டை நூலகத்தில் சுந்தரபாண்டியபுரம் அரசு பள்ளி ஆசிரியர் முருகன் எழுதிய “அறிவியல் தமிழ் பாடல்கள்” என்ற நூல் திறனாய்வு செய்யப்பட்டது. இதில் 50 மாணவர்கள் கலந்து கொண்டு திறனாய்வு செய்தார்கள். சிறந்த திறனாய்வு செய்த 10 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் வாசகர் வட்ட துணைத் தலைவர் ஆதி மூலம் தலைமை தாங்கினார். நூலகர் ராமசாமி வர வேற்புரை மற்றும் நன்றியுரை வழங்கினார். நூலக ஓவிய ஆசிரியர் முருகையா, ஜெயசிங், எழுத்தாளர் இளங்கும ரன், கவிஞர் ஐயப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னார்கள். நூல் ஆசிரியர் முருகன் சிறந்த திறனாய்வு செய்த வர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.