திண்டுக்கல், அக்.6- திண்டுக்கல்லில் புத்தக திருவிழாவை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் இலக்கிய களம் சார்பில் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வியா ழனன்று 9வது புத்தக திருவிழா துவக்க விழாவிற்கு ஆட்சியர் விசாகன் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி பாஸ்கரன், கூடு தல் ஆட்சியர் தினேஷ் குமார், டி.ஆர்.ஓ., லதா, இலக்கியக் கள தலைவர் மனோ கரன் முன்னிலை வகித்தனர். புத்தகக் கண்காட்சியை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், நீங்கள் சட்ட புத்தகம் படித்திருப்பீர்கள் ஆனால் சட்டம் சாராத புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஒரு நீதிபதி எல்லா விஷயங்க ளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அத னால் எல்லா புத்தகங்களையும் படிக்க வேண்டும். அதில் என்ன முக்கியமான விஷயம் என்னவென்றால் சில புத்தகங்க ளில் சில தகவல்கள் கிடைக்கும் அதை அடிப்படையாக வைத்து உங்கள் தீர்ப்பு களை எழுதினால் நன்றாக இருக்கும். அதனால் நான் இப்போது சட்டம் சாராத புத்தகங்களையும் படித்துக் கொண்டி ருக்கிறேன். எனக்கு பிடித்த மூன்று பேர் அவர்கள் சதா சர்வ காலமும் புத்தகமும் கையுமாக கொண்டிருப்பார்கள். சிறுவயதில் படித்த புத்தகத்தை மீண்டும் எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம். மீண்டும் படிக்கும் போது வெவ்வேறு கோணங்களில் உங்களுக்கு அர்த்தங்கள் புரியும் என்று பேசினார். முன்னதாக புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து அனைத்து புத்தக ஸ்டால்களில் வைக்கப்பட்டிருந்த புத்த கங்களை நீதிபதி பார்வையிட்டார் மாவட்ட முதன்மை நீதிபதி லதா, மக ளிர் திட்ட இயக்குநர் சரவணன், முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் ,இலக்கியக் கள செயலாளர் ராமமூர்த்தி, நிர்வாக செயலாளர் கண்ணன், பொருளாளர் மணிவண்ணன், துணைத் தலை வர்கள் மணி, சந்திரா, சரவணன், ராதா கிருஷ்ணன், உதவி தலைவர்கள் ஜான் பிரிட்டோ, கோவிந்தராஜ், சேக் தாவூது உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.