districts

img

பெரியார் பிறந்த மண்ணில் மாட்டிறைச்சிக்கு தடையா!

ஈரோடு, டிச.19- பெரியார் பிறந்த மண்ணில் மாட்டி றைச்சி விற்க அனுமதிக்க மறுப்பதாக குற்றஞ்சாட்டி ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் தலைமை யில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்த னர்.  புளியம்பட்டி நகராட்சியில் உள்ள வார சந்தையில், இடிக்கப்பட்ட மாட்டி றைச்சி கடைகளை கட்டிக் கொடுக்க வும், இடிக்கப்பட்ட கடைகளுக்கு இழப் பீடு வழங்கவும், நிரந்தரமாக இறைச்சிக் கூடம் கட்டும் வரை எவ்வித தடையு மின்றி இக்கடைகள் செயல்பட அனும திக்க வேண்டும் என தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில்  பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வா கத்திடம் திங்களன்று மனு அளித்தனர்.  முன்னதாக, பெரியார் மண்ணில் மாட்டிறைச்சிக்கு தடையா, மாட்டி றைச்சி விற்பனையில் உலகில் இந்தியா முதலிடம் வகிக்கும் நிலையில் புளியம் பட்டியில் தடையா என்ற பதாகை களை ஏந்தி வந்தனர். இதில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ப.மாரிமுத்து, தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் பி.பி.பழனிசாமி, சுப்ர மணி, ஏ.பி.ராஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.