districts

மதுரை முக்கிய செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர்  மாவட்டக்குழு சார்பில் மாவட்ட சிறப்பு பேரவை- தீக்கதிர்  சந்தா வழங்கும் நிகழ்ச்சி. இடம்: நாடார் திருமண மஹால்,  சமயநல்லூர். திங்கட்கிழமை  மாலை 5 மணி, பங்கேற்பு:  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், கே.சாமு வேல்ராஜ், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா. 

வி.தொ.ச. மதுரை மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

மதுரை, நவ.27- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10வது மாவட்ட மாநாடு டிசம்பர் 20 ஆம் தேதி அன்று  ஒத்தக்கடையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற் கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் ஞாயிறன்று மாலை ஒத்தக்கடையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் பி.அழகர்சாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வி.உமாமகேஸ்வரன், மாவட்டச் செயலாளர் சொ.பாண்டியன் ஆகியோர் பேசினர். இதில் வரவேற்புக்குழு தலைவராக பி.அழகர்சாமி, செயலாளராக எம்.கலைச்செல்வன், பொருளாளராக கே.மலர், துணைத் தலைவராக சி.பாண்டி, துணைச் செயலாளராக கே. மச்சராசா, உட்பட 60 பேர் கொண்ட  வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.

மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி

இராஜபாளையம், நவ.27- இராஜபாளையம் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த வர் கார்த்திக் (25). இவர் தனது உறவினர் முத்துப்பாண்டி  என்பவருடன் சேர்ந்து  ஏசி, பிரிட்ஜ்,  வாசிங் மிஷின்   சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தார். சர்வீஸ் சென்டரில் வைத்து  பிரிட்ஜ் பழுதுபார்க்கும் போது மின்சாரம் பாய்ந்து கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கார்த்திக் தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில் இராஜபாளையம் தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிஎம் புதிய கிளை அமைப்பு 

மதுரை, நவ.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புற நகர் மாவட்டம் மேலூர் தாலுகா, கொட்டகுடி ஊராட்சி  ஆண்டிபட்டி புதூர் என்னும் ஊரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளைச்செய லாளராக எம்.பால்பாண்டி தேர்வு செய்யப்பட்டார். அமைப்பு கூட்டத்தில் கட்சியின் மேலூர் தாலுகா செய லாளர் எம்.கண்ணன், தாலுகாக்குழு உறுப்பினர் எஸ். பி. மணவாளன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தந்தை மீது பெட்ரோல் ஊற்றி  தீ வைத்த மகன் கைது

அருப்புக்கோட்டை, நவ.27- அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டியில் தனி யாக வசித்து வருபவர் பாக்கியராஜ் (63). இவரது மகன்  குருமூர்த்தி (35). இவர் வாழ்வாங்கி கிராமத்தில் வசித்து  வருகிறார். இந்நிலையில், பாக்கியராஜ் தனது டிராக்டரை மகன் குருமூர்த்தியிடம் வாடகைக்கு விட்டு பணத்தை தருமாறு கொடுத்திருந்தாராம். ஆனால் குருமூர்த்தியோ, வாடகைப் பணத்தை பாக்கி யராஜிடம் வழங்காமல் அதை செலவு செய்ததாக கூறப்படு கிறது. எனவே, குருமூர்த்தியை அவர் திட்டினாராம். இத னால் ஆத்திரமடைந்த குருமூர்த்தி, தந்தை என்றும் பாரா மல், பாக்கியராஜ் உறங்கிக் கொண்டிருந்த போது, கதவு இடைவெளி வழியாக பெட்ரோலை உள்ளே ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இதில் தீக்காயமடைந்து தப்பி வந்த பாக்கியராஜ், இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் உயிரிழப்பில் சந்தேகம்: உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை, நவ.27- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தெற்கு  பல்லவராயன்பத்தையைச் சேர்ந்தவர் திருச்செல்வம். இவரது மனைவி பழனியம்மாள் (35). இவர்களுக்கு 10  ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் 4 பெண் குழந்தைகள் உள்ளனர். திருச்செல்வம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்.  இந்நிலையில், பழனியம்மாளை கடந்த நவ.23 ஆம்  தேதியிலிருந்து காணவில்லை என அவரது தந்தை தங்க வேலு, நவ.25 ஆம் தேதி கறம்பக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தொம்பரம்பட்டி தைல மரக்காட்டில் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலை யில்  கிடப்பதாக, கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், இறந்த நபர் பழனியம்மாள் என்பது தெரிய வந்தது. இதையறிந்த பழனியம்மாளின் உறவினர்கள், பழனியம்மாளின் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவரை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரியும் புதுப்பட்டியில் திடீர் சாலை மறியல் செய்தனர். தக வலறிந்த புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் முரு கேசன், கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி, ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் தீபக்ரஜினி ஆகி யோர் பழனியம்மாளின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். 

டிச.15-க்குள் தனித்தேர்வர்கள்  மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கிடுக!

இராமநாதபுரம் ஆட்சியர் அறிவுறுத்தல்

இராமநாதபுரம் ஆட்சியர் அறிவுறுத்தல் இராமநாதபுரம், நவ.27- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலை வர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இராமநாதபுரம், மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு  எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவு கள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றி தழ்கள் தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடி யாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  தேர்வு மையத்தில்  நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத தனித்  தேர்வர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் மீண்டும் பெறப்பட்டுள்ளன. இதன்  தொடர்ச்சியாக மதிப்பெண் சான்றிதழ் களை பெற்றுக் கொள்ளாமலிருக்கும் மார்ச்  2014 முதல்  செப்டம்பர் 2019 வரையுள்ள பருவங்களுக்குரிய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மற்றும் மேற்காண் தேர்வுக்கு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிய தேர்வரால் பெறப்படாமலிருக்கும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் இருப்பில் உள்ளன. தேர்வுத்துறை விதிமுறைகளின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வரு டங்கள் கழித்து தனித்தேர்வர்களால் பெறப்  படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்  தும் அழிக்கப்பட வேண்டும். எனவே மேலே குறிப்பிட்ட பருவங்க ளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத  தனித்தேர்வர்கள் இந்த செய்தி அறி விப்பு வெளியிடப்படும் நாளில் இருந்து 15.12.2022-க்குள் இராமநாதபுரம், அரசுத்  தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவல கத்தில் அலுவலகப் பணி நாட்களில் அலு வலக வேலை நேரத்தில் நேரில் அணு கியோ அல்லது ரூ.45 மதிப்புள்ள அஞ்சல்  வில்லை ஒட்டிய சுய முகவரி  எழுதப்பட்ட  உறையுடன்  தேர்வரின் கையொப்பமிடப் பட்ட கோரிக்கைக் கடிதம், தேர்வரின் தேர்வு கூட நுழைவுச்சீட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்   நகல் இணைத்து இவ்வலுவல கத்திற்கு அனுப்பியோ உரிய மதிப்பெண்  சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்.  மேற்குறிப்பிட்ட பருவங்களுக்குரிய தனித்தேர்வர்களால் கோரப்படாத மதிப் பெண் சான்றிதழ்களை பெற இதுவே இறுதி வாய்ப்பாகும், தவறினால் மேற்படி தேர்வுப் பருவ மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு இவ்வலு வலகத்தால் உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற  மின் ஊழியர் தற்கொலை 

தேனி, நவ.27- தேனி அருகே ஓய்வுபெற்ற மின் ஊழியர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் . தேனி அருகே அரண்மனைப்புதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமலிங்கம் (77).இவர் ஓய்வுபெற்ற மின் ஊழியர் ஆவார் .17 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் கலா வதி என்பவருடன்  வசித்து வந்தார். இருவருக்கும் கருத்து  வேறுபாடு ஏற்பட்டு மன விரக்தியில் இருந்த இவர் தனது  உடலில்  மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்து இறந்து விட்டார். இது தொடர்பாக சோமலிங்கம் மகள் கமலா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள் .

மனைவியை கழுத்தறுத்துக் கொன்று கணவன் தப்பி ஓட்டம் 

வேடசந்தூர், நவ.28-  வேடசந்தூர் அருகே குடும்ப பிரச்சனையால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டில் இருந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கணவன் தப்பி  ஓடிவிட்டார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள  பூத்தாம்பட்டியைச் சேர்ந்த பந்தல் அமைக்கும் தொழி லாளி ராஜசேகர்(வயது 40). இவருக்கும் குஜிலி யம்பாறை அருகே உள்ள வடுகம்பாடி ஊராட்சி அரண் மனையூரைச் சேர்ந்த தேவி(வயது 35) என்பவருக்கும் திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு சஞ்சீவி(வயது 10), தீனா(வயது 9), ஹர்சன்(வயது 8) ஆகிய மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.கடந்த தீபாவளிக்கு ராஜசேகருக்கும் தேவிக்கும் தீபாவளிக்கு துணிகள் எடுப்பது சம்பந்தமாக சண்டை ஏற்பட்டது. தேவி கோபித்துக்கொண்டு அரண்மணையூரில் உள்ள  தனது தாயார் தங்கத்தின் வீட்டிக்கு குழந்தைகளுடன் சென்று தங்கியுள்ளார். ஞாயிறன்று காலை ராஜசேகர் அரண்மணையூருக்கு வந்து, தேவியிடம் ஊருக்கு செல்லலாம் என்று கூறி அழைத்துள்ளார். ஆனால் தேவி  வரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் தான் மறைத்து  வைத்திருந்த கத்தியால் தேவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் அங்கி ருந்து தப்பி ஓடினார். இது குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை தேடிவருகிறார்கள்.

காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் அகழாய்வு செய்திடுக! அமைச்சரிடம் கோரிக்கை

சிவகங்கை,நவ.27- சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா, செயலர் இரா. நரசிம்மன் ஆகியோர்  காளை யார்கோவில் பாண்டியன் கோட்டையில் அகழாய்வு செய்யக்கோரி தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மனு  அளித்தனர். இதுகுறித்து புலவர் கா. காளிராசா செய்தியாளர்களி டம் கூறுகையில், காளையார் கோவிலில் தொன்மை யான மேடாக, பாண்டியன் கோட்டை சங்க கால கோட்டை யின் எச்சமாக மண்மேடாய் காட்சி தருகிறது. பாண்டியன்  கோட்டையில் மிகவும் பழமையான சங்ககாலச் செங்கல்  எச்சங்கள், கீழடியில் கிடைத்தது போன்ற கையால் செய்யப்பட்ட மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சிறுவர்கள் விளையாடும் வட்டச் சில்லுகள், சிறிய அளவிலான உருண்  டைகள், பந்து போன்ற மண் உருண்டைகள் கள ஆய்வில் கிடைக்கப்பெற்றுள்ளன. கருப்பு சிவப்பு நிற பானை ஓட்டில் மோசிதபன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்திருப்பது மேலும் இப்பகுதி கீழடி போன்று பல  வரலாற்றை சுமந்து இருக்கிறது என எண்ண முடி கிறது. ஆகவே அமைச்சர்  இவ்விடத்தில் முறையான அகழாய்வை தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ள வேண்டும். சிவகங்கை சார்ந்த தொன்மை களை பாதுகாக்க சிவகங்கை அரசு அருங்காட்சியத்திற்கு தனி இடம் ஒதுக்கி அதில் நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று தெரிவித்தார்.

குடிபோதையில் கணவர் தொல்லை  தாய், மகள் தற்கொலைக்கு  முயன்றதில் மகள் மரணம் 

தேனி, நவ.27- பெரியகுளம் அருகே கணவர் குடிபோதையில் தொல்லை கொடுத்ததால் தாய்,மகள் தற்கொலைக்கு முயன்றத்தில் பயிற்சி மருத்துவரான மகள் உயிரிழந்தார். பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி  சுமித்ரா (49). இவரது மகள் மதுமிதா (26) வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்து விட்டு தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார் .இவரது கணவர் நாராயணசாமி என்பவர் விசாகப்பட்டினத்தில் கப்பலில் மீன் பிடிக்கும் வேலை செய்து வந்துள்ளார் .இவர் வேலைக்கு செல்லா மல் மது அருந்திவிட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.  உறவினர்களிடம் கடன் பெற்று ,மேலும் சுமித்ரா பெற்றோர் கட்டிக்கொடுத்த வீட்டை விற்றுத் தருமாறு வீட்டில் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த  சுமித்ரா மகளுடன்  தற்கொலை செய்ய திட்டமிட்டார் . மதுமிதா  வீட்டில் இருந்த பருத்தி செடிக்கு அடிக்கும்  மருந்தை குடித்த நிலையில் மயங்கியுள்ளார். சுமித்ரா  மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். அருகில் இருந்த வர்கள் இருவரையும்  பெரியகுளம் அரசு மருத்துவ மனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த  மருத்துவர்கள் இருவரையும் பரிசோதனை செய்த போது  மதுமிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுமித்ராவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இது குறித்து சுமித்ரா அளித்த புகாரின் பேரில் அவ ரது  கணவர் நாராயணசாமி மீது வழக்கு பதிவு செய்து, தென்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

சாலையை கடக்க முயன்றவர் பலி

திருநெல்வேலி. நவ. 27- திருநெல்வேலி  ரகுமான்பேட்டை முத லாவது வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர் (53). இவர் கங்கை கொண்டானில் உள்ள மான்கள் சரணா லயம் அருகே வேலைக்குச் சென்றி ருந்தார். வேலையைமுடித்துவிட்டு இரவில் சாலையின் ஒரு புறத்தில் இருந்துமறு புறத்திற்கு செல்வதற்காக சாலையைக் கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக  வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை  வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி, நவ.27-  தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு  விடிய விடிய மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரு கிறது. வடகிழக்கு பருவமழையின்போது தேனி மாவட்டத்தில் பரவலாக மழை  பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்ட மும் உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து பாச னத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட் டது. இதனால் நீர்மட்டம் குறையத் தொடங்கியது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு சாரலாக தொடங்கி விடிய விடிய பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. போடியில் பெய்த மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும்  வைகை அணைக்கு தண்ணீர் வரத்து 685 கன அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 66.86 அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1719 கன அடி நீர் திறக்கப்படுகிறது.  முல்லைப்  பெரியாறு அணை நீர்மட்டம்  138.05 அடியாக உள்ளது. 257 கன அடி நீர்  வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம்  54.45 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வரு கிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர்  வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படு கிறது. சோத்துப்பாறை 0.5, போடி 16.2, வீரபாண்டி 43, அரண்மனைப்புதூர் 21.4, ஆண்டிபட்டி 25.2 மி.மீ மழையளவு பதி வாகி உள்ளது.