தேனி, அக்.21- பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி யின் நீர்ப்பிடிப்பு பகுதி களான கொடைக்கானல் மற் றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அக்டோபர் 8 முதல் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில், அக்.12 முதல் கும்பக்கரை அருவி யில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. சுற்றுலா பயணிக ளின் பாதுகாப்பு கருவி கும் பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அரு வியின் நீர்ப்பிடிப்பு பகுதி களில் மழைப்பொழிவு முற்றி லும் இல்லாத நிலையில், அருவியில் ஏற்பட்ட வெள் ளப்பெருக்கு குறைந்து நீர் வரத்து சீரானதால் கடந்த 9 நாட்களுக்கு பின்பு கும்பக்கரை அருவியில் சுற் றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித் துள்ளனர். மேலும் தொடர் விடுமுறை நாட்கள் என்ப தால் அருவிக்கு சுற்றுலா பய ணிகள் படையெடுத்தனர்.