districts

img

அய்யணன் அம்பலம் 24-ஆவது நினைவு தினம்: சிபிஎம் மரியாதை

மதுரை, அக்.30- அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் அய்யணன் அம்பலத்தின் 24- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயி றன்று மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே ராஜ கம்பீரம் கிராமத்திலுள்ள அவ ரது நினைவிடத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், சிபிஎம் கிழக்கு தாலுகா செயலாளர் எம்.கலைச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி ஆகியோர் மாலையணிவித்து மரி யாதை செலுத்தினர் . அய்யணன் அம்பலம் 25 ஆண்டு காலம் தொடர்ந்து மதுரை கிழக்கு ஊராட்சி மன்ற பெருந்தலைவர் பொறுப்பை வகித்தவர். தமி ழக சட்டசபையின் மேலவை உறுப்பினர். இந்திய சோவி யத் நட்புறவு கழகத்தின்  தலைவர் பொறுப்புகளை யும் வகித்தவர் ஆவார். 24  ஆண்டுகளுக்கு முன் முத்து ராமலிங்கத் தேவர் ஜெயந்தி பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு வரும் வழியில் விபத்  தில் அய்யணன் அம்பலம் மறைந்தார்.